கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு விளிம்பில் அரபிக் கடலோரத்தில் இருக்கிறது எங்கள் குடியிருப்பு. கத்தோலிக்க மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள் எங்கள் மூதாதையர். தூண்டில் மீன்பிடித் தொழிலுக்கு ஒத்தனா மரத்தில் (ஒருவர் தனியாக மீன்பிடிக்கச் செல்லும் கட்டுமரம்) கடலுக்குள் போகும் அப்பா வெகுதொலைவுக்குப் பாய்விரித்துப் பயணித்து நாள் முழுவதும் தூண்டில் போட்டுக் காத்திருப்பார். ஒரு மச்சமும் சிக்காது. ‘பவிச்சு வயது ஒட்டிக் கரையில என் மக்க என்னைக் காத்து நிக்குமே கடவுளே! நான் வெறும் மரத்தோடவா கரைக்குப் போகணும்? ஒரு மச்சம் என் தூண்டிலில் சிக்கவிடும் கடவுளே!’ என்று உருகி ஜெபம் செய்துகொண்டே இரவும் பகலும் தூண்டில் வீசுவார்.
Saturday, 19 August 2017
Saturday, 12 August 2017
Tuesday, 8 August 2017
காலத்தை வென்ற கட்டுமரங்கள் கடல் ஓசை வானொலியில் ஆற்றிய உரை
கடல் ஓசை 90.4 சமுதாய வானொலியில் காலத்தை வென்ற கட்டுமரங்கள் குறித்து பேரா. வறீதையா கான்ஸ்தந்தின் உரையை கேட்கலாம்.
Saturday, 5 August 2017
Saturday, 29 July 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 13: காலத்தை வென்ற கட்டுமரம்
கட்டுமரம் என்னும் பாரம்பரிய மரக்கலம், தமிழ்நாட்டின் மீன்பிடி மண்டலங்களுக்குத் தக்கவாறு பெற்றுள்ள வடிவ மாற்றங்கள் அபாரமானவை. அரபிக் கடலின் சீற்றம் மிகுந்த கடற்பரப்பை எதிர்கொள்ள ஒடுகலான வடிவம்; முத்துக்குளித்துறையின் தென்பகுதியில் ஆழிக்கடலைச் சமாளிக்க பரந்த- கனமான வடிவம்; சோழமண்டலக் கடற்கரையின் (வட தமிழ்நாடு) மாரியா வீச்சைச் சமாளிக்க அணியம் வளைந்து மேல்நோக்கிக் கூம்பிய ‘ஆந்திரா வடிவம்’.
Saturday, 22 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 12: மூழ்கவே மூழ்காத படகு
அலையைக் கடத்தல் என்னும் பழங்குடி சாகசம், எனக்குள் அச்சத்தையும் பரவசத்தையும் ஒருசேரத் தூண்டும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தின மேற்குக் கடற்கரை பொதுவாக ஆழமும் அலைச்சீற்றமும் இணைந்த கடல் பகுதி. ஆனி - ஆடி மாதங்களில் நான்கைந்து மரம்பிடி- சாகச வீரர்கள் விடியலில் ஒரு கட்டுமரத்தைக் கடலுக்குள் செலுத்தப் போராடும் காட்சி இங்கே வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பனைபோல் எழும் அலையிடம் தோற்றுக் கரைக்குக் கட்டுமரம் அடித்துவரப்படும். இப்படியாக, நீரோட்டத்தின் போக்கில் ஓரிரு கிலோமீட்டர் தொலைவுக்கு கரைநெடுகக் கட்டுமரத்தை கரைநீரோட்டம் இழுத்துச் சென்றுவிடும்.
Saturday, 15 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 11: விரல் நுனியில் இருக்கும் கண்
வெள்ளக்காடாக விரிந்துகிடக்கும் உப்புநீர்ப் பெருவெளி. உட்கடலுக்குள் போய்விட்டீர்கள் என்றால் இதுதான் உங்கள் காட்சி அனுபவம். ஆனால் ஒரு கடலோடியைப் பொறுத்தவரை அப்படியல்ல. கடல் பெருவெளியிலும் ஊர்கள் இருக்கின்றன. கோயில், குளம், தெருக்கள், கட்டிடங்கள், சாலைச் சந்திப்புகள் என நில எல்லைகளை நாம் நினைவில் வைத்திருப்பதுபோல, தான் புழங்கும் கடல் கடலோடிக்கு அத்துப்படி.
Saturday, 8 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 10: ஜி.பி.எஸ். பிதாமகன் யார்?
கடலோடிகளின் இடம் கணிக்கும் உத்திக்கு முத்தாய்ப்பாக நிற்பது தாழ்த்துவலை என்னும் பழந்தொழில்நுட்பம். தனி அடையாளம் ஏதுமற்ற கடல் பெருவெளி நீர்ப்பரப்பில், வலையை விரித்துவிட்டு (அமிழ்த்தி வைத்தல்) கரை திரும்பிவிடுவது; ஓரிரு நாட்களுக்குப் பிறகு கடலுக்குள்ளே வலை விரித்த இடத்துக்குச் சென்று குறிப்பிட்ட இடத்தில் துல்லியமாக நங்கூரமிட்டு வலையை இழுத்து மீன்களைக் கழித்துவிட்டு, வலையை மீண்டும் கடலில் அமிழ்த்திவைத்துவிட்டு அறுவடை மீனுடன் கரை திரும்புவது. தூண்டில் மீன்பிடித் தொழிலிலும் மீன் அறுவடைக்களங்களைக் குறிப்புணர்ந்து கணித்துப் போடுவது உண்டு. இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிறது?
Saturday, 1 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 9: மச்சம் பிடித்தவனுக்கு மிச்சம் இல்லை
பஞ்ச கால உணவு, மீனவர் உணவைப் பற்றிப் பேசுகையில் ஆமை முட்டை பற்றியும் பேச வேண்டும். கோடைக் காலத்தில் அலைவாய்க்கரை மணல் தேரிகளில் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளைச் சேகரித்து வீட்டுக்குக் கொண்டுவருவோம். கோழி முட்டை போலன்றி ஆமை முட்டை சவ்வு போன்ற உறையால் அமைந்தது. முழுமையாக வேகவைத்த முட்டை சுவைமிகுந்த புரத உணவு. பச்சையாகவும் குடிக்கலாம்.
Saturday, 24 June 2017
கடலம்மா பேசறங் கண்ணு 8: மனதைவிட்டு அகலாத சுவை!
பஞ்ச காலத்தில் கத்தோலிக்க நிவாரண சேவை என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து உணவு தானிய, பால் மாவு, எண்ணெய்ப் பொருட்கள் வருவதுண்டு. ஒரு கத்தோலிக்க மறை மாவட்டத்தின் தலைமையிடத்தில் இவற்றை இருப்புவைக்கச் சேமிப்புக் கிடங்குகளை அமைத்திருப்பார்கள். தாய்-சேய் நலத் திட்டம், வேலைக்கு உணவுத் திட்டம், பள்ளிகளில் நண்பகல் உணவுத் திட்டம் என்பதாகப் பல பெயர்களில் அவை கடற்கரைக்கும் வரும்.
Saturday, 17 June 2017
கடலம்மா பேசறங் கண்ணு 7: பஞ்ச கால ஞாபகங்கள்
சமூக வரலாற்றில் பெரும் பஞ்சங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. காரணங்கள் ஒன்றிரண்டல்ல. பஞ்சம் ஒரு வரலாற்றுப் படிப்பினை. சமூகத்தின் ஆகச் சிறந்த மீளும் பண்புகளும் ஈனமான சுரண்டல் – அடக்குமுறைப் பண்புகளும் வெளிப்படும் காலமும் அதுதான். பஞ்சத்தைத் தொடர்ந்து மக்களின் உணவுமுறையில் பெரும் திருப்பம் நிகழ்வதும் உண்டு.
Saturday, 10 June 2017
Saturday, 3 June 2017
Saturday, 27 May 2017
Saturday, 20 May 2017
Saturday, 13 May 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 02: பேரிழப்பு தந்தது என்ன?
அக்டோபர் 26, 2012. அது எங்கள் குடும்பத்துக்குத் துயரம் தோய்ந்த நாள். என் மைத்துனரின் மகன் லெராய், கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் படித்துவந்தான். தனது பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இறச்சகுளம் பகுதிக்கு அவன் இயற்கைச் சுற்றுலா சென்றிருந்தான். ஒரு நண்பனின் வீட்டருகே ஆற்றில் மூழ்கி நால்வரும் இறந்துபோயினர். நான்கில் இரண்டு சடலங்கள் கைகோத்த நிலையில் நிகழ்விடத்துக்கு 100 மீட்டர் கீழே மூழ்கியெடுக்கப்பட்டன. இவனும் அதில் ஒருவன்.
Saturday, 6 May 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 01: முன்னோர்களின் கால்களைத் தழுவிய அதே நீர்
தொடுவானம் கதிரவனைச் சிவப்பினால் போர்த்த முயலும் அந்திவேளை. அலைவாய்க்கரையில் நின்றவாறு கடலின் பரப்பை நீங்கள் வியந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கணத்தில் தண்ணென்ற குளிர்ச்சியுடன் உங்கள் பாதங்களைத் தழுவி மீளும் கடல்நீர்,…ஒரு கட்டத்தில் துருவப் பனிமலைகளின் ஏதோவொரு பனிப்பாளத்தின் ஒரு பகுதியாக இருந்தது; பெருங்கடல் நீரோட்டங்களாய் உலகளாவிய பயணத்தில் இருந்தது; பஞ்சுப் பொதிகளென நீராவி வடிவத்தில் மேகமாக மாறி, வான்முகட்டைத் தழுவியலைந்தது; மலைமுகடுகளில் கனிந்து மழையாய்ப் பொழிந்தது; சுனை, சிற்றோடை, சிற்றாறு, பேராறு எனப் பெருகி, திணைதோறும் பலவகை நிலப்பரப்புகளைத் தழுவியணைத்து, தங்கி நின்று, கழிவெளிகளில் கலந்தது; மீண்டும் தாய்வீடு சேர்ந்தது.
Tuesday, 28 February 2017
Sunday, 19 February 2017
எண்ணூர் முதல் இனயம் வரை: காயப்பட்ட கடற்கரை
சென்னை மெரினா கடற்கரை இன்று புதிய அடையாளம் பெற்றுவிட்டது. ‘தை எழுச்சி’க்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. ஃப்ளோரிடாவுக்கு அடுத்தபடியாக உலகின் நீளமான கடற்கரை மணல்வெளி. கி.பி. 1908-ல் இன்றைய சென்னை துறைமுகத்துக்கு முன்னோடியாகக் கடல் பாலம் நிறுவப்பட்டது முதல் கரைக்கடல் நீரோட்டங்களின் போக்கில் ஏற்பட்ட மணல் குவிவால் உருவானதுதான் மெரினா. 1978-ல் இயங்கத் தொடங்கியது விழிஞம் மீன்பிடித் துறைமுகம். அதற்குத் தென்கிழக்காக ஐந்து கி.மீ. நீளத்துக்கு ஒன்றரை கி.மீ. அகலத்தில் புதிய நிலமும் மணல்வெளியும் உருவாயிற்று. பாண்டியரின் துறைமுக நகரமாக விளங்கிய கொற்கை, இன்று கடல் விளிம்பிலிருந்து ஐந்து கி.மீ. விலகியிருக்க, கடல் பின்வாங்கி விட்டது.
Tuesday, 31 January 2017
Wednesday, 13 May 2015
Sunday, 18 January 2015
கடலோர வனங்கள் எங்கே?
இயற்கை என்பது நுட்பமான சங்கிலி, எங்கே அறுபட்டாலும் பெரும் பிரச்சினைதான்.
தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவும் எதிர்கால மாகவும் அமைபவை திணை நிலமும் மொழியும்தாம். திணை நிலம் அதன் நீர் பெறுமதியால் அமைவது. தமிழகத்தின் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் வடிநிலங்கள் நெய்தல் நன்னீராதாரங்களில் சங்கமிக்கின்றன. வடக்கே பாலாறு தொடங்கி தெற்கே குழித்துறையாறு வரை அத்தனை ஆறுகளும் கடலோடு கலந்து, கரைக்கடலில் மீன்வள உற்பத்திக்குப் பங்களிக்கின்றன. கடலில் கலப்பதற்கு முன்பாக, இந்த ஆறுகள் நெய்தல் நீராதாரங்களைச் செழுமைப்படுத்துகின்றன. முன்பு, இந்த நிலப்பரப்புகளில் காயல்கள், கழிமுகங்கள், கண்மாய்கள் இயல்பாக இணைக்கப்பட்டிருந்தன. நம்முடைய முன்னோர்கள் பயிரிடுவதற்காக அணை களை நம்பியிருக்கவில்லை. கண்மாய் சார்ந்த விவசாயம்தான் அன்று தமிழ் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துவந்தது.
Friday, 26 December 2014
நிலம் நிகழ்த்தும் சுனாமி (இந்து தமிழ் திசை நடுப்பக்க கட்டுரை)
சுனாமிப் பேரழிவுக்குப் பிறகான 10 ஆண்டுகளில் மீனவர் வாழ்வு மேம்பட்டிருக்கிறதா?
நேற்று அடித்து ஓய்ந்தது போலிருக்கிறது 2004-ல் இந்தியப் பெருங்கடல் சுனாமி. நிலநடுக்கம், புயல், வெள்ளப்பெருக்கம் போன்ற பேரிடர்கள் நமக்குப் பரிச்சயமானவையே. எனினும், சுனாமி என்னும் சொல் 2004-ல்தான் நம் மொழிவழக்கில் நுழைந்தது. நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அந்நிகழ்வும் அதன் தாக்கமும் நமக்குப் புதியவை.
Wednesday, 24 September 2014
The Sea and the Coast V. Geetha
The Sea and the Coast
V. Geetha
(Address at a seminar on Nature at
NCBS, Bangalore)
Thursday, 11 September 2014
Tuesday, 11 September 2012
Wednesday, 30 May 2012
Friday, 19 September 2008
Option for the Marginalised J. Ragu Antony
To talk today about the tsunami of 2004 is, it seems, like flogging the proverbial dead horse: what once shook the world is no longer news; the media after feasting on tsunami news has spat it out like an overchewed tobacoo stub and has turned to feed on other sensational matters; the state has reverted to its actual agenda of appeasing dominant vote banks; other people have resumed their routines; elections are held; budgets are tabled; life goes on. But unfortunately for the tsunami victims, especially for fisher folks of Kanyakumari district, life offers no hope. They are still left clueless.
Thursday, 11 September 2008
அறிந்திராத கடல் - எம். வேதசகாயகுமார்
கடல் குறித்த அறிவு சமகாலத் தமிழில் இல்லை. பெரு நகரங்களில் ஒட்டுமொத்த மீன்களின் பெயர்கள் மூன்று அல்லது நான்காகச் சுருக்கப்பட்டுள்ளன. சில நூறு மீன்களின் பெயர்களைத் தமிழ் இழந்துவிட்டுள்ளது. இந்த இழப்பு தொடர் கிறது. இந்த நிலை சமவெளி மனிதர்களிடம்தான் உள்ளது என்பதல்ல. கடலோர மனிதர்களும் கடலுக்கு அன்னியமாகிக் கொண்டிருக்கிறார்கள். கடல் குறித்தான அறிவை அழிவிலிருந்து மீட்டாக வேண்டும்.
சொல்லோவியமாகும் கடலின் இரகசியங்கள் - பிரான்சிஸ் ஜெயபதி.சே.ச.
அறிவியல் ஓர் அறிவுத் தேடல்; உலகின் கூறுகளை ஒட்டு மொத்தமாகவும் நுண்கூறுகளாகவும், புரிந்துகொள்ள உதவும் தேடல். நாம் வாழும் உலகு, மண்ணாகவும் நீராகவும் காற்றாகவும் நம்முடைய அன்றாட வாழ்வனுபவங்களை ஒட்டிய மனப் படிமங்களாகவும் உள்ளன. ஆனால் இவை அத்தனைக்கும் எல்லை கட்டியபடி இருப்பது கடல். உலகம் ஆழியால் சூழப் பட்டுக் கிடக்கிறது.
மனிதனைத் தேடும் பாதை- யாழன் ஆதி
வறீதையாவின் கட்டுரைகள் ஒவ்வொன்றும்
படித்துமுடித்தவுடன் நான் யார் என்ற கேள்வியை
உள்ளுக்குள் எழுப்புகின்றன.
மனிதனைத் தேடும் பாதை- யாழன் ஆதி
சிலுவையைத் தோள்மாற்றக்கூட ஆளில்லை! கடலின் தொப்புள்கொடி ப.சிவகாமி
இருபத்தெட்டு ஆண்டுகள் அய்யேயெஸ் அதிகாரியாகப் பணி யாற்றியதையும் அதற்கான பல பயிற்சிகள் மேற்கொண்டதையும் வறீதையா கான்ஸ்தந்தினின் ‘கரைக்கு வராத மீனவத் துயரம்’ என்ற கட்டுரைத் தொகுப்புக்கு அறிமுக உரை எழுதும் போது நினைத்துப் பார்க்கிறேன். ஓர் ஆறுமாத காலம் தமிழக அரசின் கால்நடை மற்றும் மீன்வளத்துறையின் செயலாளராகப் பணியாற்றிய காலம் தவிர, வேறெந்த சந்தர்ப்பத்திலும் மீனவர்கள் பற்றிக் கேள்விப்பட்டதாகவோ விவாதித்ததாகவோ ஞாபக மில்லை. ஏழை மக்கள் என்ற பொது கொட்டிலில் தலித், மீனவர், பழங்குடி மக்கள் அடைக்கப்பட்டு, வெகு மேலோட்ட மான கூட்டங்கள் எவர் மனமும் புண்படாவண்ணம் நடத்தப் பெறும். மற்ற பூர்வகுடியினரைப்போல மீனவர்களின் வாழ்வு, அரசியல், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவை அரசுத்தரப்பில் பொதுவான தளத்தில் விவாதிக்கக்கூடிய அளவில் எப்போதும் இருந்ததே கிடையாது. இது எனக்கு திகைப்பை உண்டாக்குகிறது.
துள்ளும் மீன்களும் தொடரும் வன்முறையும்-ஒரு மீளாய்வு - அரங்க மல்லிகா
வரலாறுகள் மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் காட்சிப்படுத்த வேண்டும். ஏற்கனவே கற்பிதம் செய்யப்பட்டுள்ள பண்பாடுகள் ஒரு மாயைத் தன்மையைக் கற்பித்துள்ளன. இதற்கு இலக்கியங்கள் ஆவணங்களாகத் திகழ்கின்றன. இலக்கியங்களின் பொதுத்தன்மையை விலக்கி, விளிம்பார்ந்த மக்களின் மொழி, செல்லாடல்களில் பொதுத்தன்மையை விலக்கி, விளிம்பார்ந்த மக்களின் மொழி, செல்லாடல்களில் புதைந்துள்ள விழுமியங் களை, மறைக்கப்பட்ட வாழ்வனுபவங்களைக் கூழாங்கல்லை உருட்டி ஒடும் தெளிந்த நீரின் தன்மைபோல சமூக இயங்கு தளத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டிய ஒரு பணியை வறீதையா கான்ஸ்தந்தின், எம். வேதசகாயகுமாரின் ‘விளிம்பு, மையம், மொழி’ தொகுப்பு முன்மொழிகின்றது.
மீனவர்க்கான அரசியல் பா.வீரமணி
நசுக்கப்படும் இனத்தின் துயரம் இந்நூலில்
வெடித்த நிலம் போல் வெம்மையாய்க் காட்சியளித்தாலும்
போகவேண்டிய பாதையையும் இந்நூல்
துலக்கமாகக் காட்டுகிறது.
மீனவர்க்கான அரசியல்
பா.வீரமணி
Monday, 1 January 2007
Monday, 5 June 2006
பலிசோறாக வீசியடிக்கப்படும் மீனவர் வாழ்வு - மாலதி மைத்ரி
‘கடலுக்கு முகத்தையும் நிலத்துக்கு முதுகையும் காட்டிப் பழகிய’ மீனவப் பெருங்குடி மக்களின் வசதிக்காக ஒருவேளை சட்டசபையும் பாராளுமன்றமும் கடலில் அமைக்கப்பட்டிருந் தால், மீனவர்கள் நம் ஆட்சியாளர்களை எளிதாக அணுகியிருப்பார்களோ; மீனவர்களின் வாழ்வியல் துயரமும் இன்னல் களும் குறைய வாய்ப்பிருந்திருக்குமோவென கசந்த நகைப்புக் கிடையே எண்ணத் தோன்றுகிறது.
Sunday, 4 June 2006
கடலோர வாழ்வெனும் கட்டுமரம் - எம். வேதசகாயகுமார்
வறீதையாவின் குரலை ஆழிப்பேரலைக்குப்பின் இயேசு சபை யைச் சார்ந்த ஜெயபதி அடிகளார் ஒருங்கிணைத்த கருத்தரங்கு களில் முதன்முதலாக என்னால் கேட்க முடிந்தது. ஆனால் இக்குரலுக்காக வெகுகாலம் நான் காத்திருந்ததான உணர்வு என்னுள் எழுந்தது. வறீதையாவுடனான என் நெருக்கத்திற்கு இதுவே காரணமாகலாம். இதற்கு நான் ஜெயபதி அடிகளார்க்கு நன்றி கூற வேண்டும். ஜெயபதி அடிகளாரின் பணியின் முக்கியத் துவத்தை அவர் சார்ந்துள்ள சமய அமைப்பு எந்த அளவிற்கு உணர்ந்துள்ளது என்னும் ஐயமும் என்னுள் எழுகிறது. கடலோர மக்களின் வாழ்வைக் குறித்து, அறிவுத்தளத்தில் உணர்வு ரீதியாக சிந்திக்கும் ஒரு குரலைக் கருத்தரங்கு எனக்கு அறிமுகப்படுத் தியது. ஒரு சமூகம் குறித்ததான சிந்தனை, அச்சமூகத்திலிருந்து தான் எழ வேண்டும். அச்சமூகம் சிந்திக்கத் துவங்குகிறது என்பதற்கான அறிகுறி இது. சமூகச் சிந்தனை ஒருங்கிணைக்கப் படும்பொழுது செயல்தளம் தானாக உருக்கொள்ளும். எந்த ஒரு மாற்றத்தினையும் வெளியிலிருந்து புகுத்திவிட முடியாது.
Saturday, 3 June 2006
Friday, 2 June 2006
Thursday, 1 June 2006
கடலும் நிலமும் : ஒரு மறுவாழ்வுத் தேடல்-ஹெச்.ஜி.ரசூல்
இயற்கைப் பேரிடர்களான பூகம்பம், நிலச்சரிவு, சூறாவளி, பெருவெள்ளம், சுனாமித் தாக்குதல் ஆகியவை பல்லாயிரக் கணக்கில் உயிர்களை எதிர்பாரா நிலையில் பலிவாங்கியுள்ளன. இதற்கொரு இணைதளத்தில் அணுகுண்டு வெடிப்புகளாலும் யுத்தங்களாலும் ஏவுகணை வீச்சுகளாலும் ஆக்ரமிப்பின் கொலை வெறித் தாண்டவங்கள் திட்டமிட்டே செயல்படுத்தப்பட்டு உயிர்களையும் வாழ்வையும் அழித்துள்ளன. குழந்தைகளையும் பெண்களையும் திரிசூலமுனைகளில் பலிவாங்கிய பயங்கர வாதத்தின் அச்சுறுத்தல் குஜராத்தில்கூட வெளிப்பட்டது. உயிர்கள் பலிவாங்கப்படும் இச்சம்பவங்கள், ஒருபுறம் இயற்கை இருப்பின் சமன்குலைவினாலும் மறுபுறம் சமுதாய இருப்பின் சமன்குலைவினாலும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. எதிர்பாராதது திட்டமிடப்பட்டது என்பதான இரண்டு நோக்கங்கள் இச் சம்பவங்களில் தொழிற்படுகின்றன.
Tuesday, 25 April 2006
உணவு தரும் சமூகமும் நுகரும் சமூகமும் - செந்தீ நடராசன்
ஒரு பேரிடரும் அதைத் தொடர்ந்த சமூகச் சிக்கல்களும் கட்டமைப்பு முயற்சிகளும் முற்றாக ஒரு நிரந்தர, உறுதியான வாழ்க்கைக் கட்டமைப்பை நோக்கிய பலதரப்பினரின் சிந்தனை களை பேராசிரியர் வறீதையாவும் அருட்திரு. ஜஸ்டஸ§ம் மனோரீதியான ஈடுபாட்டுடன் தங்கள் எண்ணங்களை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள். ஆழிப்பேரிடருக்குப் பின் என்னும் இந்த ஆவணத்தை வாசிக்கையில் நான் நாற்காலிச் சிந்தனை யாளனாக உணர்கிறேன்.
Friday, 31 March 2006
அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் ஹெச்.ஜி.ரசூல்
அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் - எழுத்தாளர் ஹெச். ஜி. ரசூல் திண்ணையில் எழுதிய பதிவு.
Tuesday, 6 September 2005
புறக்கணிக்கப்படும் பூர்வீக மீனவக் குடிகள் - ஆ. சிவசுப்பிரமணியன்
நீண்ட கடற்கரையைத் தமிழ்நாட்டிற்கு இயற்கை வழங்கி யுள்ளது. ஆற்றங்கரை நாகரிகத்தை அடுத்த வரலாற்றுத் தொன்மை கடற்கரை நகரங்களுக்கும் அங்கு வாழும் குடி களுக்கும் உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரையில் தென் மாவட்டங்களின் கடற்கரைப்பகுதியானது தொன்மைச் சிறப் புடையது. மதிப்புமிக்க முத்துகள் ஒரு காலத்தில் இப்பகுதியில் கிடைத்தன. இதன் அடிப்படையிலேயே இராமேஸ்வரம் தொடங்கிக் கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப்பகுதி ‘முத்துக் குளித்துறை’ என அழைக்கப்பட்டது.
Tuesday, 26 October 2004
மனநிலைகள் மாறவேண்டும்-ஐசக் அருமைராஜன்
கடற்கரை உலகம் வித்தியாசமானது. அழகானதும் கூட, ஆனால் அலைகடல் ஓரம் சின்னஞ்சிறு குடிசைகளிலோ, வீடுகளிலோ வாழ்கிற கடலோடிகளின் வாழ்க்கையில் அழகுமில்லை, அடிப் படை வசதியுமில்லை. நினைத்துப் பார்க்கையில் வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது நம்மை. ஆனால் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளைத் தாண்டிய பிறகும் அவர்களின் வாழ்வு பின்தங்கியே இருப்பது கண்டு எந்த அரசும் வெட்கப்பட வில்லை என்பதே இன்னும் வெட்கமானது.
Friday, 2 January 2004
Subscribe to:
Posts (Atom)
விடியலை நோக்கி 2008 நேர்காணல்
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
* கையறுநதி / - வறீதையா கான்ஸ்தந்தின்/ கடல்வெளி வெளியீடு/ பக்கங்கள் : 196 விலை : ரூ. 220/-. நூல் அறிமுகம் : செ.கா. --------------------...
-
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
#300daysafterCycloneOckhi #VareethiahKonstantine Mass casualties in the deep sea due to Cyclone Ockhi 2017 expose the fatal inad...


























