கட்டுமரம் என்னும் பாரம்பரிய மரக்கலம், தமிழ்நாட்டின் மீன்பிடி மண்டலங்களுக்குத் தக்கவாறு பெற்றுள்ள வடிவ மாற்றங்கள் அபாரமானவை. அரபிக் கடலின் சீற்றம் மிகுந்த கடற்பரப்பை எதிர்கொள்ள ஒடுகலான வடிவம்; முத்துக்குளித்துறையின் தென்பகுதியில் ஆழிக்கடலைச் சமாளிக்க பரந்த- கனமான வடிவம்; சோழமண்டலக் கடற்கரையின் (வட தமிழ்நாடு) மாரியா வீச்சைச் சமாளிக்க அணியம் வளைந்து மேல்நோக்கிக் கூம்பிய ‘ஆந்திரா வடிவம்’.
Saturday, 29 July 2017
Saturday, 22 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 12: மூழ்கவே மூழ்காத படகு
அலையைக் கடத்தல் என்னும் பழங்குடி சாகசம், எனக்குள் அச்சத்தையும் பரவசத்தையும் ஒருசேரத் தூண்டும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தின மேற்குக் கடற்கரை பொதுவாக ஆழமும் அலைச்சீற்றமும் இணைந்த கடல் பகுதி. ஆனி - ஆடி மாதங்களில் நான்கைந்து மரம்பிடி- சாகச வீரர்கள் விடியலில் ஒரு கட்டுமரத்தைக் கடலுக்குள் செலுத்தப் போராடும் காட்சி இங்கே வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பனைபோல் எழும் அலையிடம் தோற்றுக் கரைக்குக் கட்டுமரம் அடித்துவரப்படும். இப்படியாக, நீரோட்டத்தின் போக்கில் ஓரிரு கிலோமீட்டர் தொலைவுக்கு கரைநெடுகக் கட்டுமரத்தை கரைநீரோட்டம் இழுத்துச் சென்றுவிடும்.
Saturday, 15 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 11: விரல் நுனியில் இருக்கும் கண்
வெள்ளக்காடாக விரிந்துகிடக்கும் உப்புநீர்ப் பெருவெளி. உட்கடலுக்குள் போய்விட்டீர்கள் என்றால் இதுதான் உங்கள் காட்சி அனுபவம். ஆனால் ஒரு கடலோடியைப் பொறுத்தவரை அப்படியல்ல. கடல் பெருவெளியிலும் ஊர்கள் இருக்கின்றன. கோயில், குளம், தெருக்கள், கட்டிடங்கள், சாலைச் சந்திப்புகள் என நில எல்லைகளை நாம் நினைவில் வைத்திருப்பதுபோல, தான் புழங்கும் கடல் கடலோடிக்கு அத்துப்படி.
Saturday, 8 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 10: ஜி.பி.எஸ். பிதாமகன் யார்?
கடலோடிகளின் இடம் கணிக்கும் உத்திக்கு முத்தாய்ப்பாக நிற்பது தாழ்த்துவலை என்னும் பழந்தொழில்நுட்பம். தனி அடையாளம் ஏதுமற்ற கடல் பெருவெளி நீர்ப்பரப்பில், வலையை விரித்துவிட்டு (அமிழ்த்தி வைத்தல்) கரை திரும்பிவிடுவது; ஓரிரு நாட்களுக்குப் பிறகு கடலுக்குள்ளே வலை விரித்த இடத்துக்குச் சென்று குறிப்பிட்ட இடத்தில் துல்லியமாக நங்கூரமிட்டு வலையை இழுத்து மீன்களைக் கழித்துவிட்டு, வலையை மீண்டும் கடலில் அமிழ்த்திவைத்துவிட்டு அறுவடை மீனுடன் கரை திரும்புவது. தூண்டில் மீன்பிடித் தொழிலிலும் மீன் அறுவடைக்களங்களைக் குறிப்புணர்ந்து கணித்துப் போடுவது உண்டு. இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிறது?
Saturday, 1 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 9: மச்சம் பிடித்தவனுக்கு மிச்சம் இல்லை
பஞ்ச கால உணவு, மீனவர் உணவைப் பற்றிப் பேசுகையில் ஆமை முட்டை பற்றியும் பேச வேண்டும். கோடைக் காலத்தில் அலைவாய்க்கரை மணல் தேரிகளில் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளைச் சேகரித்து வீட்டுக்குக் கொண்டுவருவோம். கோழி முட்டை போலன்றி ஆமை முட்டை சவ்வு போன்ற உறையால் அமைந்தது. முழுமையாக வேகவைத்த முட்டை சுவைமிகுந்த புரத உணவு. பச்சையாகவும் குடிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)
விடியலை நோக்கி 2008 நேர்காணல்
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
* கையறுநதி / - வறீதையா கான்ஸ்தந்தின்/ கடல்வெளி வெளியீடு/ பக்கங்கள் : 196 விலை : ரூ. 220/-. நூல் அறிமுகம் : செ.கா. --------------------...
-
#300daysafterCycloneOckhi #VareethiahKonstantine Mass casualties in the deep sea due to Cyclone Ockhi 2017 expose the fatal inad...




