Showing posts with label ஆழிப்பேரிடருக்குப் பின். Show all posts
Showing posts with label ஆழிப்பேரிடருக்குப் பின். Show all posts

Monday, 5 June 2006

பலிசோறாக வீசியடிக்கப்படும் மீனவர் வாழ்வு - மாலதி மைத்ரி


‘கடலுக்கு முகத்தையும் நிலத்துக்கு முதுகையும் காட்டிப் பழகிய’ மீனவப் பெருங்குடி மக்களின் வசதிக்காக ஒருவேளை சட்டசபையும் பாராளுமன்றமும் கடலில் அமைக்கப்பட்டிருந் தால், மீனவர்கள் நம் ஆட்சியாளர்களை எளிதாக அணுகியிருப்பார்களோ; மீனவர்களின் வாழ்வியல் துயரமும் இன்னல் களும் குறைய வாய்ப்பிருந்திருக்குமோவென கசந்த நகைப்புக் கிடையே எண்ணத் தோன்றுகிறது. 

Sunday, 4 June 2006

கடலோர வாழ்வெனும் கட்டுமரம் - எம். வேதசகாயகுமார்


வறீதையாவின் குரலை ஆழிப்பேரலைக்குப்பின் இயேசு சபை யைச் சார்ந்த ஜெயபதி அடிகளார் ஒருங்கிணைத்த கருத்தரங்கு களில் முதன்முதலாக என்னால் கேட்க முடிந்தது. ஆனால் இக்குரலுக்காக வெகுகாலம் நான் காத்திருந்ததான உணர்வு என்னுள் எழுந்தது. வறீதையாவுடனான என் நெருக்கத்திற்கு இதுவே காரணமாகலாம். இதற்கு நான் ஜெயபதி அடிகளார்க்கு நன்றி கூற வேண்டும். ஜெயபதி அடிகளாரின் பணியின் முக்கியத் துவத்தை அவர் சார்ந்துள்ள சமய அமைப்பு எந்த அளவிற்கு உணர்ந்துள்ளது என்னும் ஐயமும் என்னுள் எழுகிறது. கடலோர மக்களின் வாழ்வைக் குறித்து, அறிவுத்தளத்தில் உணர்வு ரீதியாக சிந்திக்கும் ஒரு குரலைக் கருத்தரங்கு எனக்கு அறிமுகப்படுத் தியது. ஒரு சமூகம் குறித்ததான சிந்தனை, அச்சமூகத்திலிருந்து தான் எழ வேண்டும். அச்சமூகம் சிந்திக்கத் துவங்குகிறது என்பதற்கான அறிகுறி இது. சமூகச் சிந்தனை ஒருங்கிணைக்கப் படும்பொழுது செயல்தளம் தானாக உருக்கொள்ளும். எந்த ஒரு மாற்றத்தினையும் வெளியிலிருந்து புகுத்திவிட முடியாது. 

Saturday, 3 June 2006

இந்த நல்ல கனவு நனவாகட்டும் - சூ. செர்வாசியுஸ்


மீனவர்கள், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இந்தத் தேசத்தின் மக்களாக அணிவகுப்பவர்கள்; இந்த நூலில் உரக்க ஒலிக்கும் கீழ்வரும் கருத்துக்களை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். அவற்றை வரிசைப்படுத்தி அவற்றுடன் நான் கொண்டிருக்கும் உடன்பாட்டை உற்சாகமுடன் வெளிப் படுத்துகின்றேன்.

Friday, 2 June 2006

எல்லோரும் பேசுகிறார்கள் மீனவனைத் தவிர . . . ஹாமீம் முஸ்தபா



ஆழிப்பேரிடருக்குப்பின் என்னும் நூலை முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின், அருட்திரு.ஜோசப் ஜஸ்டஸ் இருவரும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

Thursday, 1 June 2006

கடலும் நிலமும் : ஒரு மறுவாழ்வுத் தேடல்-ஹெச்.ஜி.ரசூல்



இயற்கைப் பேரிடர்களான பூகம்பம், நிலச்சரிவு, சூறாவளி, பெருவெள்ளம், சுனாமித் தாக்குதல் ஆகியவை பல்லாயிரக் கணக்கில் உயிர்களை எதிர்பாரா நிலையில் பலிவாங்கியுள்ளன. இதற்கொரு இணைதளத்தில் அணுகுண்டு வெடிப்புகளாலும் யுத்தங்களாலும் ஏவுகணை வீச்சுகளாலும் ஆக்ரமிப்பின் கொலை வெறித் தாண்டவங்கள் திட்டமிட்டே செயல்படுத்தப்பட்டு உயிர்களையும் வாழ்வையும் அழித்துள்ளன. குழந்தைகளையும் பெண்களையும் திரிசூலமுனைகளில் பலிவாங்கிய பயங்கர வாதத்தின் அச்சுறுத்தல் குஜராத்தில்கூட வெளிப்பட்டது. உயிர்கள் பலிவாங்கப்படும் இச்சம்பவங்கள், ஒருபுறம் இயற்கை இருப்பின் சமன்குலைவினாலும் மறுபுறம் சமுதாய இருப்பின் சமன்குலைவினாலும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. எதிர்பாராதது திட்டமிடப்பட்டது என்பதான இரண்டு நோக்கங்கள் இச் சம்பவங்களில் தொழிற்படுகின்றன.

Tuesday, 25 April 2006

உணவு தரும் சமூகமும் நுகரும் சமூகமும் - செந்தீ நடராசன்


ஒரு பேரிடரும் அதைத் தொடர்ந்த சமூகச் சிக்கல்களும் கட்டமைப்பு முயற்சிகளும் முற்றாக ஒரு நிரந்தர, உறுதியான வாழ்க்கைக் கட்டமைப்பை நோக்கிய பலதரப்பினரின் சிந்தனை களை பேராசிரியர் வறீதையாவும் அருட்திரு. ஜஸ்டஸ§ம் மனோரீதியான ஈடுபாட்டுடன் தங்கள் எண்ணங்களை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள். ஆழிப்பேரிடருக்குப் பின் என்னும் இந்த ஆவணத்தை வாசிக்கையில் நான் நாற்காலிச் சிந்தனை யாளனாக உணர்கிறேன்.

Tuesday, 6 September 2005

புறக்கணிக்கப்படும் பூர்வீக மீனவக் குடிகள் - ஆ. சிவசுப்பிரமணியன்



நீண்ட கடற்கரையைத் தமிழ்நாட்டிற்கு இயற்கை வழங்கி யுள்ளது. ஆற்றங்கரை நாகரிகத்தை அடுத்த வரலாற்றுத் தொன்மை கடற்கரை நகரங்களுக்கும் அங்கு வாழும் குடி களுக்கும் உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரையில் தென் மாவட்டங்களின் கடற்கரைப்பகுதியானது தொன்மைச் சிறப் புடையது. மதிப்புமிக்க முத்துகள் ஒரு காலத்தில் இப்பகுதியில் கிடைத்தன. இதன் அடிப்படையிலேயே இராமேஸ்வரம் தொடங்கிக் கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப்பகுதி ‘முத்துக் குளித்துறை’ என அழைக்கப்பட்டது. 

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...