Showing posts with label வேளம். Show all posts
Showing posts with label வேளம். Show all posts

Saturday, 11 November 2017

கடல்புரத்தில் காத்திரமான ஓர் உரையாடல்














மிழ் இலக்கணம் திணை மரபு பற்றிக் கூறும்போது நெய்தல் திணையை ‘கடலும் கடல் சார்ந்த இடமும்’ என்று விளக்குகிறது. கடலைத் தொழிலுக்கான இடமாகவும், கடற்கரையை வாழ்வதற்கான இடமாகவும் கொண்ட இப்பகுதி மக்கள் ‘பரதவர்’ என்பதிலிருந்து தொடங்கி, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தமிழர்களின் வரலாறு பற்றிப் பேசும்போது ‘கடல்கொண்ட கபாடபுரம்’ தொன்மத்தில் தொடங்கி, ‘திரைகடலோடி திரவியம் தேடு’ என்ற பழமொழிகள் வரை எண்ணற்ற சான்றுகள் பரதவர் எனும் கடலோரப் பகுதி மக்களின் வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன. எனினும் நமக்குக் கிடைத்த இந்த அறிவும்கூட மேலோட்டமானதுதான் என்பதை நமக்கு உணர்த்துவதாய் வந்துள்ள கட்டுரைத் தொகுப்பு நூல்தான் ‘வேளம்’ (உரையாடல்).

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...