"கடந்து வந்த பாதையைப் பார்த்தால் பிரம்மிப்பு அடங்கவில்லை இன்னும். எப்படி நடந்தது இது? என் அப்பா அதிகம் பேசமாட்டார். உலக ஞானமோ, வாய்ச்சவடாலோ, நிலபுலன்களோ, துணை வருவாயோ எதுவும் இல்லாமல் வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருந்த அந்த சாதாரண மனிதருக்குள், இப்படியொரு பெரிய கனவு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்திருக்கிறது. ‘எப்பாடு பட்டாவது என் மக்களை படிக்கவைத்து ஆளாக்குவேன். கடலில் படுகிற கஷ்டங்களெல்லாம் என்னோடு போகட்டும்’ என்பது அவரது மந்திரமாக இருந்தது.
Saturday, 26 August 2017
Saturday, 19 August 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 16: கரைதிரும்பும் கட்டுச்சோறு
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு விளிம்பில் அரபிக் கடலோரத்தில் இருக்கிறது எங்கள் குடியிருப்பு. கத்தோலிக்க மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள் எங்கள் மூதாதையர். தூண்டில் மீன்பிடித் தொழிலுக்கு ஒத்தனா மரத்தில் (ஒருவர் தனியாக மீன்பிடிக்கச் செல்லும் கட்டுமரம்) கடலுக்குள் போகும் அப்பா வெகுதொலைவுக்குப் பாய்விரித்துப் பயணித்து நாள் முழுவதும் தூண்டில் போட்டுக் காத்திருப்பார். ஒரு மச்சமும் சிக்காது. ‘பவிச்சு வயது ஒட்டிக் கரையில என் மக்க என்னைக் காத்து நிக்குமே கடவுளே! நான் வெறும் மரத்தோடவா கரைக்குப் போகணும்? ஒரு மச்சம் என் தூண்டிலில் சிக்கவிடும் கடவுளே!’ என்று உருகி ஜெபம் செய்துகொண்டே இரவும் பகலும் தூண்டில் வீசுவார்.
Saturday, 12 August 2017
Tuesday, 8 August 2017
காலத்தை வென்ற கட்டுமரங்கள் கடல் ஓசை வானொலியில் ஆற்றிய உரை
கடல் ஓசை 90.4 சமுதாய வானொலியில் காலத்தை வென்ற கட்டுமரங்கள் குறித்து பேரா. வறீதையா கான்ஸ்தந்தின் உரையை கேட்கலாம்.
Saturday, 5 August 2017
Subscribe to:
Posts (Atom)
விடியலை நோக்கி 2008 நேர்காணல்
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
* கையறுநதி / - வறீதையா கான்ஸ்தந்தின்/ கடல்வெளி வெளியீடு/ பக்கங்கள் : 196 விலை : ரூ. 220/-. நூல் அறிமுகம் : செ.கா. --------------------...
-
#300daysafterCycloneOckhi #VareethiahKonstantine Mass casualties in the deep sea due to Cyclone Ockhi 2017 expose the fatal inad...



