Showing posts with label கடலம்மா பேசுறங் கண்ணு. Show all posts
Showing posts with label கடலம்மா பேசுறங் கண்ணு. Show all posts

Saturday, 9 September 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 19: ரௌத்ரம் பழகிய கோம்பை

உயிர் இயங்குவதற்கு சக்தி தேவை. வேதிம சக்தியை வெப்ப சக்தியாக்கி, பிறகு அதை உழைப்புச் சக்தியாக விநியோகிப்பதுதான் வளர்சிதைமாற்றம் என்கிறது உயிரியல். வெப்பம்தான் உயிரியக்கத்தின் மூல ஆதாரம். வெப்பத்தை இழந்துவிட்டால் உடல் வெறும் சடம். வெப்பம் மிதமிஞ்சிப் போனால் பஸ்மாசுரனுக்கு நேர்ந்த முடிவுதான் எல்லா உயிருக்கும் நேரிடும். உயிரினங்கள் எவ்வாறு இச்சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன என்பது இயற்கை நிகழ்த்தும் அற்புதம்.

Saturday, 2 September 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 18: ஈடுகட்ட முடியாத தியாகம்


“அப்பா, இந்தக் கட்டுமரத்தைக் கடலுக்குள்ளே எப்படிக் கொண்டு போவாங்க? மீன் லேலம் போடுறதுண்ணா என்னப்பா? இந்த மீனையெல்லாம் எதுக்குப்பா மண்ணில வாரி வீசியிருக்காங்க? கடலில் மிதந்துகிட்டிருக்கிற கட்டுமரத்தில எப்படிப்பா அவங்க எந்திரிச்சு நிக்கிறாங்க? கடல்ல தாகம் எடுத்தால் எங்கே போவாங்க?...”

Saturday, 26 August 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 17: என்னோடு போகட்டும்


"கடந்து வந்த பாதையைப் பார்த்தால் பிரம்மிப்பு அடங்கவில்லை இன்னும். எப்படி நடந்தது இது? என் அப்பா அதிகம் பேசமாட்டார். உலக ஞானமோ, வாய்ச்சவடாலோ, நிலபுலன்களோ, துணை வருவாயோ எதுவும் இல்லாமல் வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருந்த அந்த சாதாரண மனிதருக்குள், இப்படியொரு பெரிய கனவு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்திருக்கிறது. ‘எப்பாடு பட்டாவது என் மக்களை படிக்கவைத்து ஆளாக்குவேன். கடலில் படுகிற கஷ்டங்களெல்லாம் என்னோடு போகட்டும்’ என்பது அவரது மந்திரமாக இருந்தது.

Saturday, 19 August 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 16: கரைதிரும்பும் கட்டுச்சோறு


கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு விளிம்பில் அரபிக் கடலோரத்தில் இருக்கிறது எங்கள் குடியிருப்பு. கத்தோலிக்க மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள் எங்கள் மூதாதையர். தூண்டில் மீன்பிடித் தொழிலுக்கு ஒத்தனா மரத்தில் (ஒருவர் தனியாக மீன்பிடிக்கச் செல்லும் கட்டுமரம்) கடலுக்குள் போகும் அப்பா வெகுதொலைவுக்குப் பாய்விரித்துப் பயணித்து நாள் முழுவதும் தூண்டில் போட்டுக் காத்திருப்பார். ஒரு மச்சமும் சிக்காது. ‘பவிச்சு வயது ஒட்டிக் கரையில என் மக்க என்னைக் காத்து நிக்குமே கடவுளே! நான் வெறும் மரத்தோடவா கரைக்குப் போகணும்? ஒரு மச்சம் என் தூண்டிலில் சிக்கவிடும் கடவுளே!’ என்று உருகி ஜெபம் செய்துகொண்டே இரவும் பகலும் தூண்டில் வீசுவார்.

Saturday, 12 August 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 15: பசி, சாகசம், மரணம்!

கடல் தங்கல் பயணத்துக்காக எடுத்துச் செல்லும் கட்டுச்சோற்றுக் கவளங்கள் மூன்று நாட்கள் தாங்கும். அதனுடன் சிறு பனையோலைக் கடகத்தில் வேகவைத்த உணக்கக் கிழங்கை (சீவி உலர்த்திய மரவள்ளிக் கிழங்கு) எடுத்துச் செல்வார்கள். பசி போக்கவும் விழித்திருக்கவும் அருமையான நொறுக்குத் தீனி இது.

Saturday, 5 August 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 14: சாகசக் கடல்வீரன்!


மண் சார்ந்த சமூகங்களில் ஊக்கம் மிகுந்த தொழிலாளிகளுக்கு எப்போதுமே மதிப்புதான். ‘பெண்டாட்டி பிள்ளைகளுக்குக் கஞ்சி ஊற்ற’த் தகுதியான இளைஞனுக்குப் பெண் கொடுக்க எல்லோரும் முன்வருவார்கள். சல்லிக்கட்டில் ஏறுதழுவும் வீரம் ஆணின் அடையாளம். மருதத் திணையில் இது யதார்த்தம்.

Saturday, 29 July 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 13: காலத்தை வென்ற கட்டுமரம்


கட்டுமரம் என்னும் பாரம்பரிய மரக்கலம், தமிழ்நாட்டின் மீன்பிடி மண்டலங்களுக்குத் தக்கவாறு பெற்றுள்ள வடிவ மாற்றங்கள் அபாரமானவை. அரபிக் கடலின் சீற்றம் மிகுந்த கடற்பரப்பை எதிர்கொள்ள ஒடுகலான வடிவம்; முத்துக்குளித்துறையின் தென்பகுதியில் ஆழிக்கடலைச் சமாளிக்க பரந்த- கனமான வடிவம்; சோழமண்டலக் கடற்கரையின் (வட தமிழ்நாடு) மாரியா வீச்சைச் சமாளிக்க அணியம் வளைந்து மேல்நோக்கிக் கூம்பிய ‘ஆந்திரா வடிவம்’.

Saturday, 22 July 2017

கடலம்மா பேசறங் கண்ணு 12: மூழ்கவே மூழ்காத படகு


அலையைக் கடத்தல் என்னும் பழங்குடி சாகசம், எனக்குள் அச்சத்தையும் பரவசத்தையும் ஒருசேரத் தூண்டும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தின மேற்குக் கடற்கரை பொதுவாக ஆழமும் அலைச்சீற்றமும் இணைந்த கடல் பகுதி. ஆனி - ஆடி மாதங்களில் நான்கைந்து மரம்பிடி- சாகச வீரர்கள் விடியலில் ஒரு கட்டுமரத்தைக் கடலுக்குள் செலுத்தப் போராடும் காட்சி இங்கே வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பனைபோல் எழும் அலையிடம் தோற்றுக் கரைக்குக் கட்டுமரம் அடித்துவரப்படும். இப்படியாக, நீரோட்டத்தின் போக்கில் ஓரிரு கிலோமீட்டர் தொலைவுக்கு கரைநெடுகக் கட்டுமரத்தை கரைநீரோட்டம் இழுத்துச் சென்றுவிடும்.

Saturday, 15 July 2017

கடலம்மா பேசறங் கண்ணு 11: விரல் நுனியில் இருக்கும் கண்


வெள்ளக்காடாக விரிந்துகிடக்கும் உப்புநீர்ப் பெருவெளி. உட்கடலுக்குள் போய்விட்டீர்கள் என்றால் இதுதான் உங்கள் காட்சி அனுபவம். ஆனால் ஒரு கடலோடியைப் பொறுத்தவரை அப்படியல்ல. கடல் பெருவெளியிலும் ஊர்கள் இருக்கின்றன. கோயில், குளம், தெருக்கள், கட்டிடங்கள், சாலைச் சந்திப்புகள் என நில எல்லைகளை நாம் நினைவில் வைத்திருப்பதுபோல, தான் புழங்கும் கடல் கடலோடிக்கு அத்துப்படி.

Saturday, 8 July 2017

கடலம்மா பேசறங் கண்ணு 10: ஜி.பி.எஸ். பிதாமகன் யார்?


கடலோடிகளின் இடம் கணிக்கும் உத்திக்கு முத்தாய்ப்பாக நிற்பது தாழ்த்துவலை என்னும் பழந்தொழில்நுட்பம். தனி அடையாளம் ஏதுமற்ற கடல் பெருவெளி நீர்ப்பரப்பில், வலையை விரித்துவிட்டு (அமிழ்த்தி வைத்தல்) கரை திரும்பிவிடுவது; ஓரிரு நாட்களுக்குப் பிறகு கடலுக்குள்ளே வலை விரித்த இடத்துக்குச் சென்று குறிப்பிட்ட இடத்தில் துல்லியமாக நங்கூரமிட்டு வலையை இழுத்து மீன்களைக் கழித்துவிட்டு, வலையை மீண்டும் கடலில் அமிழ்த்திவைத்துவிட்டு அறுவடை மீனுடன் கரை திரும்புவது. தூண்டில் மீன்பிடித் தொழிலிலும் மீன் அறுவடைக்களங்களைக் குறிப்புணர்ந்து கணித்துப் போடுவது உண்டு. இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிறது?

Saturday, 1 July 2017

கடலம்மா பேசறங் கண்ணு 9: மச்சம் பிடித்தவனுக்கு மிச்சம் இல்லை

பஞ்ச கால உணவு, மீனவர் உணவைப் பற்றிப் பேசுகையில் ஆமை முட்டை பற்றியும் பேச வேண்டும். கோடைக் காலத்தில் அலைவாய்க்கரை மணல் தேரிகளில் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளைச் சேகரித்து வீட்டுக்குக் கொண்டுவருவோம். கோழி முட்டை போலன்றி ஆமை முட்டை சவ்வு போன்ற உறையால் அமைந்தது. முழுமையாக வேகவைத்த முட்டை சுவைமிகுந்த புரத உணவு. பச்சையாகவும் குடிக்கலாம்.

Saturday, 24 June 2017

கடலம்மா பேசறங் கண்ணு 8: மனதைவிட்டு அகலாத சுவை!


பஞ்ச காலத்தில் கத்தோலிக்க நிவாரண சேவை என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து உணவு தானிய, பால் மாவு, எண்ணெய்ப் பொருட்கள் வருவதுண்டு. ஒரு கத்தோலிக்க மறை மாவட்டத்தின் தலைமையிடத்தில் இவற்றை இருப்புவைக்கச் சேமிப்புக் கிடங்குகளை அமைத்திருப்பார்கள். தாய்-சேய் நலத் திட்டம், வேலைக்கு உணவுத் திட்டம், பள்ளிகளில் நண்பகல் உணவுத் திட்டம் என்பதாகப் பல பெயர்களில் அவை கடற்கரைக்கும் வரும்.

Saturday, 17 June 2017

கடலம்மா பேசறங் கண்ணு 7: பஞ்ச கால ஞாபகங்கள்


சமூக வரலாற்றில் பெரும் பஞ்சங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. காரணங்கள் ஒன்றிரண்டல்ல. பஞ்சம் ஒரு வரலாற்றுப் படிப்பினை. சமூகத்தின் ஆகச் சிறந்த மீளும் பண்புகளும் ஈனமான சுரண்டல் – அடக்குமுறைப் பண்புகளும் வெளிப்படும் காலமும் அதுதான். பஞ்சத்தைத் தொடர்ந்து மக்களின் உணவுமுறையில் பெரும் திருப்பம் நிகழ்வதும் உண்டு.

Saturday, 10 June 2017

கடலம்மா பேசறங் கண்ணு 6: குளுவர!


குளுவர - தென்மேற்குப் பருவகாலம் தென்னெல்லைக் கடற்கரைக்குத் தருகிற அனுபவத்தை என் சிறு பருவ நினைவுகளிலிருந்து அகழ்ந்தெடுக்க முயல்கையில், இந்தச் சொல்தான் அலைமோதுகிறது.

Saturday, 3 June 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 05: இயற்கையோடு ஓர் உடன்படிக்கை


நிலாச் சோறூட்டிப் பிஞ்சுகளை உறங்க வைக்கும் நம் பாட்டிமார் சொல்லும் தேவதைக் கதைகளை நினைவுபடுத்துவதாக விரிகிறது கடல் பழங்குடிகளின் வாழ்க்கை. எளிமையும் சுதந்திரமும் மகிழ்ச்சியுமே ததும்பி நின்ற அந்த வாழ்க்கை, மீண்டும் கைகூடி வராதா என்னும் ஏக்கம் என் மேல் கவிகிறது.

Saturday, 27 May 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 04: பழங்குடியின் பெருங்குரல்


மடிவலைக் காலம், கரைமடிவலைக் காலம் ஒட்டுமொத்த மீனவக் கிராமத்துக்கும் கொண்டாட்டக் காலம். எல்லா வீடுகளிலும் தாராளமாய் மீன் சமையல் இருக்கும். அந்த வகையில், `வேளா ஏறப்பிடிப்பு’ கன்னியாகுமரிக் கடற்கரையில் பெரும் கொண்டாட்டம்தான். மடி தாங்காத வேளா மீன்பாடு!

Saturday, 20 May 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 03: சீறும் கடலும் திமிறும் கடலோடியும்


`இவங்க ஏன் இப்படி இருக்காங்க!’
சுனாமியைத் தொடர்ந்து சமவெளி மக்கள் கடலோடிகளைக் குறித்துத் திரும்பத் திரும்ப அதிர்ச்சியுடன் எழுப்பிய கேள்வி இதுதான்.
ஒரு கடலோடியை இயக்குவது எது? சந்தேகமின்றி, கடல்தான். அச்சு அசலாக, அவன் கடலின் வார்ப்பு. அவனுக்குள் கடல் இயங்கிக்கொண்டிருக்கிறது.

Saturday, 13 May 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 02: பேரிழப்பு தந்தது என்ன?


அக்டோபர் 26, 2012. அது எங்கள் குடும்பத்துக்குத் துயரம் தோய்ந்த நாள். என் மைத்துனரின் மகன் லெராய், கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் படித்துவந்தான். தனது பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இறச்சகுளம் பகுதிக்கு அவன் இயற்கைச் சுற்றுலா சென்றிருந்தான். ஒரு நண்பனின் வீட்டருகே ஆற்றில் மூழ்கி நால்வரும் இறந்துபோயினர். நான்கில் இரண்டு சடலங்கள் கைகோத்த நிலையில் நிகழ்விடத்துக்கு 100 மீட்டர் கீழே மூழ்கியெடுக்கப்பட்டன. இவனும் அதில் ஒருவன்.

Saturday, 6 May 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 01: முன்னோர்களின் கால்களைத் தழுவிய அதே நீர்

தொடுவானம் கதிரவனைச் சிவப்பினால் போர்த்த முயலும் அந்திவேளை. அலைவாய்க்கரையில் நின்றவாறு கடலின் பரப்பை நீங்கள் வியந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கணத்தில் தண்ணென்ற குளிர்ச்சியுடன் உங்கள் பாதங்களைத் தழுவி மீளும் கடல்நீர்,…ஒரு கட்டத்தில் துருவப் பனிமலைகளின் ஏதோவொரு பனிப்பாளத்தின் ஒரு பகுதியாக இருந்தது; பெருங்கடல் நீரோட்டங்களாய் உலகளாவிய பயணத்தில் இருந்தது; பஞ்சுப் பொதிகளென நீராவி வடிவத்தில் மேகமாக மாறி, வான்முகட்டைத் தழுவியலைந்தது; மலைமுகடுகளில் கனிந்து மழையாய்ப் பொழிந்தது; சுனை, சிற்றோடை, சிற்றாறு, பேராறு எனப் பெருகி, திணைதோறும் பலவகை நிலப்பரப்புகளைத் தழுவியணைத்து, தங்கி நின்று, கழிவெளிகளில் கலந்தது; மீண்டும் தாய்வீடு சேர்ந்தது.

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...