Monday, 1 October 2018
SAMAS' KADAL: THE VOICE OF EMPATHY FROM THE PLAIN OF APATHY
| Workshop Lecture: 'Our Sea-coasts Through the Eyes of Maritime Artisans.'Fisheries College and Res. Instt., TNFU., Ponneri. Sep. 2016. |
Samas’ KADAL:
THE VOICE OF EMPATHY FROM THE PLAIN OF APATHY
For the last ten years I have received a multitude of calls with request to find them a story on coastal people for making some TV serial or movie and I was skeptical about their interests. For, I knew what will be its fate at the end of the day. Without exception, everyone was keen on a ‘single story’ that will become a box office hit, and never the ‘complete story’.
கடற்கரையின் குரல் | எம். வேதசகாயகுமார் [கடலம்மா பேசுறங் கண்ணு-அறிமுகம்]
![]() |
| Rs. 150/- KSL Media Ltd. |

‘சுனாமிக்குப்’ பின்னரான மறுகட்டுமானத்தின்போது மானுடவியலாளரான அருட்தந்தை ஜெயபதி தொடர் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தார். சமவெளி இலக்கிய ஆளுமைகளையும் கடலோர இளைஞர்களையும் கலந்துரையாடத் தூண்டினார். கடலோர இளைஞர்கள் வெளிப்படுத்திய சீற்றம் என்னைக் கவர்ந்தது. தொடர் புறக்கணிப்புகளின் விளைவு அது. பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தினை அங்குதான் சந்தித்தேன்.
The Sea Tribes under Siege / Vareethiah Konstantine / mainSpring- KadalveLi/ 2017. FOREWORD/ S.VINCENT
![]() |
| KADALVELI |
Prof.S.Vincent.
The young boy defies his mother’s warning and plays in the incoming waves of the sea. He shrieks with joy and fear and rushes back when the waves touch his feet. His younger sister watches his brother but does not dare go near the sea. Such is our exposure to the sea. Our experience with the fury of the sea is limited to such occasional visits to the beach or to the rare thrilling rides to the Thiruvalluvar statue at Kanyakumari in small boats. We live in awe of the mighty ocean reading news items occasionally about the disasters of sinking of boats in the sea and adventurous young men getting drowned while bathing in the rough beach of Rameswaram. Only after the devastation caused by Tsunami most of us realized how strong and furious the sea could become. We are equally ignorant about the perils the fishermen encounter or about the life of the men and women who are engaged in the fishing industry. To fill this void a few writers are bringing to the people living inland the short and simple annals of the poor fishermen. One of the foremost among them is Vareethiah Konstantine.
The young boy defies his mother’s warning and plays in the incoming waves of the sea. He shrieks with joy and fear and rushes back when the waves touch his feet. His younger sister watches his brother but does not dare go near the sea. Such is our exposure to the sea. Our experience with the fury of the sea is limited to such occasional visits to the beach or to the rare thrilling rides to the Thiruvalluvar statue at Kanyakumari in small boats. We live in awe of the mighty ocean reading news items occasionally about the disasters of sinking of boats in the sea and adventurous young men getting drowned while bathing in the rough beach of Rameswaram. Only after the devastation caused by Tsunami most of us realized how strong and furious the sea could become. We are equally ignorant about the perils the fishermen encounter or about the life of the men and women who are engaged in the fishing industry. To fill this void a few writers are bringing to the people living inland the short and simple annals of the poor fishermen. One of the foremost among them is Vareethiah Konstantine.
1000கடல்மைல் [கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்] வறீதையா கான்ஸ்தந்தின் [ முகவுரை/ மாலதி மைத்ரி]
நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள பொருளாதாரத்திலிருந்து அந்நியமாக்கி கடல் மரணங்கள், கடல் படுகொலைகளில் தங்கள் ஆண்களைப் பலிகொடுத்துவிட்டு அரசுகளிடம் கையேந்தவிட்ட அரசியலையும் அரசுகள் இம்மக்களை பழிவாங்கும் சதிகளையும் வறீதையா பேசுகிறார். சமவெளி மக்களின், அதிகார வர்க்கத்தின் மனசாட்சியை 1000கடல்மைல் தொட முயற்சிக்கிறது.
மாலதி மைத்ரி
மாலதி மைத்ரி
THE SEA AND THE COAST / V.GEETHA. A REVIEW ON THE WRITINGS OF D CRUZ AND KONSTANTINE. 2015.
Konstantine is no Luddite. He makes it clear that traditional fishers, like his own father, lived for the most part in penury and hunger – and in thrall to the Church at least in southern Tamil Nadu... His dilemma is that fishers are being steadily alienated from a world that has defined their historical existence – and their very humanity – and they are powerless to affect the turn of events. Anchoring fisher claims to a dignified, sustainable existence in the ways that they have evolved over the centuries, he makes a passionate plea to recognize their distinctive conditions of existence.
THE INNER CHILD AT PLAY. Introduction to Kumarananthan’s ‘The Pale Twilight
Kumarananthan has chosen to take the road less traveled, unveiling new vistas, addressing the margins within the margins, namely the social deviants, and the issues thereof... It’s time the world stood up and spoke for them. What else could initiate such a monumental mission than literature?
Thursday, 27 September 2018
SOLAS AND ARTISANAL FISHERMEN: LESSONS FROM OCKHI
Mass casualties in the deep sea due to Cyclone Ockhi 2017 expose the fatal inadequacy
ofour Early Warning System, colossal failure
in Search and Rescue operations and
lacunae in on board safety protocols in mechanised fishing vessels. What is the
take home lesson?
------
--------- -------- ----------------
SOLAS
AND ARTISANAL FISHERMEN: LESSONS FROMOCKHI
Dr. K.
Vareethiah.
Saturday, 18 August 2018
Wednesday, 1 August 2018
Friday, 20 July 2018
Monday, 8 January 2018
கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்
ஒக்கி புயல் என்பது கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர் என்கிறார் பேராசிரியரும் எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்தந்தின்; பெண்களின் கண்கள் வழியாக ஏன் இந்தப் பேரிடரைப் பார்க்க வேண்டும் என்பதை விவரிக்கிறார் வறீதையா கான்ஸ்தந்தின்.
Thursday, 28 December 2017
பேரிடர்: அபலைகளின் துயரம்!
ஒக்கி புயலில் காணாமல்போன, கரைசேராத 500-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு அரசை வலியுறுத்தக் கோரி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த மனுவுக்குப் பதில் தர வேண்டும் என்று நீதிமன்றம் அரசைக் கேட்டிருக்கிறது. காணாமல்போன மீனவர்கள் பற்றி, அரசு பதில் சொல்லியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம், காலம்காலமாக மீனவர்கள் அனுபவித்துவரும் சிக்கலுக்குத் தீர்வாக அமையுமா?
Friday, 8 December 2017
‘பியான்’ முதல் ‘ஒக்கி’ வரை- பேரிடர்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா? (இந்து தமிழ் திசை நடுப்பக்க கட்டுரை)
'ஒக்கி’ புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த தொலைக்காட்சிச் செய்தியாளர் ஒருவரைச் சந்தித்தேன். “இந்த ஐந்து நாள் பயண அனுபவத்தில் நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?” என்று கேட்டேன். “குமரி மாவட்டத்திலேயே கடுமை யான பாதிப்பு வடக்குப் பகுதிகளில்தான். ரப்பர் தோட்டங்கள் எல்லாம் மொத்தமாகச் சேதமடைந்துவிட்டன. மின்கம்பங்களெல்லாம் ஒடிந்து தொங்குகின்றன. 20 நாட்கள் ஆனாலும் மின்சாரம் வராது. ஆனால், எல்லோரும் நாகர்கோவிலைப் பார்த்துவிட்டுப் போய்விடுகிறாரக்ள்” என்றார் அவர்.
Saturday, 11 November 2017
கடல்புரத்தில் காத்திரமான ஓர் உரையாடல்
தமிழ் இலக்கணம் திணை மரபு பற்றிக் கூறும்போது நெய்தல் திணையை ‘கடலும் கடல் சார்ந்த இடமும்’ என்று விளக்குகிறது. கடலைத் தொழிலுக்கான இடமாகவும், கடற்கரையை வாழ்வதற்கான இடமாகவும் கொண்ட இப்பகுதி மக்கள் ‘பரதவர்’ என்பதிலிருந்து தொடங்கி, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தமிழர்களின் வரலாறு பற்றிப் பேசும்போது ‘கடல்கொண்ட கபாடபுரம்’ தொன்மத்தில் தொடங்கி, ‘திரைகடலோடி திரவியம் தேடு’ என்ற பழமொழிகள் வரை எண்ணற்ற சான்றுகள் பரதவர் எனும் கடலோரப் பகுதி மக்களின் வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன. எனினும் நமக்குக் கிடைத்த இந்த அறிவும்கூட மேலோட்டமானதுதான் என்பதை நமக்கு உணர்த்துவதாய் வந்துள்ள கட்டுரைத் தொகுப்பு நூல்தான் ‘வேளம்’ (உரையாடல்).
Monday, 30 October 2017
Saturday, 16 September 2017
கடலம்மா பேசறங் கண்ணு 20: சமூக மாற்றத்தின் உயிர்நாடி
திருவனந்தபுரத்தில் சங்குமுகம் அருகே கண்ணாந்துறை என்னும் கடலோர கிராமத்தில் ஒரு சராசரி மீனவன். அவன் கடலுக்குப் போய்ச் சம்பாதிப்பதில் முக்காற்பங்கு குடி, வம்பு, வழக்கு, கைது, ஜெயில் எனக் கரைந்துவிடுகிறது. வீட்டில் கதியற்ற மனைவியுடன் பத்துப் பிள்ளைகள். தந்தை இறந்துவிட வேண்டுமெனக் குடும்பமே பிரார்த்திக்கிறது. குடும்பத்தின் இராப்பட்டினியைப் போக்க மார்க்கம் வேறின்றி அம்மா தலைச்சுமையாக மீன் விற்கும் தொழிலைத் தேர்ந்துகொள்கிறார்.
Saturday, 9 September 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 19: ரௌத்ரம் பழகிய கோம்பை
உயிர் இயங்குவதற்கு சக்தி தேவை. வேதிம சக்தியை வெப்ப சக்தியாக்கி, பிறகு அதை உழைப்புச் சக்தியாக விநியோகிப்பதுதான் வளர்சிதைமாற்றம் என்கிறது உயிரியல். வெப்பம்தான் உயிரியக்கத்தின் மூல ஆதாரம். வெப்பத்தை இழந்துவிட்டால் உடல் வெறும் சடம். வெப்பம் மிதமிஞ்சிப் போனால் பஸ்மாசுரனுக்கு நேர்ந்த முடிவுதான் எல்லா உயிருக்கும் நேரிடும். உயிரினங்கள் எவ்வாறு இச்சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன என்பது இயற்கை நிகழ்த்தும் அற்புதம்.
Saturday, 2 September 2017
Saturday, 26 August 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 17: என்னோடு போகட்டும்
"கடந்து வந்த பாதையைப் பார்த்தால் பிரம்மிப்பு அடங்கவில்லை இன்னும். எப்படி நடந்தது இது? என் அப்பா அதிகம் பேசமாட்டார். உலக ஞானமோ, வாய்ச்சவடாலோ, நிலபுலன்களோ, துணை வருவாயோ எதுவும் இல்லாமல் வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருந்த அந்த சாதாரண மனிதருக்குள், இப்படியொரு பெரிய கனவு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்திருக்கிறது. ‘எப்பாடு பட்டாவது என் மக்களை படிக்கவைத்து ஆளாக்குவேன். கடலில் படுகிற கஷ்டங்களெல்லாம் என்னோடு போகட்டும்’ என்பது அவரது மந்திரமாக இருந்தது.
Saturday, 19 August 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 16: கரைதிரும்பும் கட்டுச்சோறு
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு விளிம்பில் அரபிக் கடலோரத்தில் இருக்கிறது எங்கள் குடியிருப்பு. கத்தோலிக்க மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள் எங்கள் மூதாதையர். தூண்டில் மீன்பிடித் தொழிலுக்கு ஒத்தனா மரத்தில் (ஒருவர் தனியாக மீன்பிடிக்கச் செல்லும் கட்டுமரம்) கடலுக்குள் போகும் அப்பா வெகுதொலைவுக்குப் பாய்விரித்துப் பயணித்து நாள் முழுவதும் தூண்டில் போட்டுக் காத்திருப்பார். ஒரு மச்சமும் சிக்காது. ‘பவிச்சு வயது ஒட்டிக் கரையில என் மக்க என்னைக் காத்து நிக்குமே கடவுளே! நான் வெறும் மரத்தோடவா கரைக்குப் போகணும்? ஒரு மச்சம் என் தூண்டிலில் சிக்கவிடும் கடவுளே!’ என்று உருகி ஜெபம் செய்துகொண்டே இரவும் பகலும் தூண்டில் வீசுவார்.
Saturday, 12 August 2017
Tuesday, 8 August 2017
காலத்தை வென்ற கட்டுமரங்கள் கடல் ஓசை வானொலியில் ஆற்றிய உரை
கடல் ஓசை 90.4 சமுதாய வானொலியில் காலத்தை வென்ற கட்டுமரங்கள் குறித்து பேரா. வறீதையா கான்ஸ்தந்தின் உரையை கேட்கலாம்.
Saturday, 5 August 2017
Saturday, 29 July 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 13: காலத்தை வென்ற கட்டுமரம்
கட்டுமரம் என்னும் பாரம்பரிய மரக்கலம், தமிழ்நாட்டின் மீன்பிடி மண்டலங்களுக்குத் தக்கவாறு பெற்றுள்ள வடிவ மாற்றங்கள் அபாரமானவை. அரபிக் கடலின் சீற்றம் மிகுந்த கடற்பரப்பை எதிர்கொள்ள ஒடுகலான வடிவம்; முத்துக்குளித்துறையின் தென்பகுதியில் ஆழிக்கடலைச் சமாளிக்க பரந்த- கனமான வடிவம்; சோழமண்டலக் கடற்கரையின் (வட தமிழ்நாடு) மாரியா வீச்சைச் சமாளிக்க அணியம் வளைந்து மேல்நோக்கிக் கூம்பிய ‘ஆந்திரா வடிவம்’.
Saturday, 22 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 12: மூழ்கவே மூழ்காத படகு
அலையைக் கடத்தல் என்னும் பழங்குடி சாகசம், எனக்குள் அச்சத்தையும் பரவசத்தையும் ஒருசேரத் தூண்டும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தின மேற்குக் கடற்கரை பொதுவாக ஆழமும் அலைச்சீற்றமும் இணைந்த கடல் பகுதி. ஆனி - ஆடி மாதங்களில் நான்கைந்து மரம்பிடி- சாகச வீரர்கள் விடியலில் ஒரு கட்டுமரத்தைக் கடலுக்குள் செலுத்தப் போராடும் காட்சி இங்கே வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பனைபோல் எழும் அலையிடம் தோற்றுக் கரைக்குக் கட்டுமரம் அடித்துவரப்படும். இப்படியாக, நீரோட்டத்தின் போக்கில் ஓரிரு கிலோமீட்டர் தொலைவுக்கு கரைநெடுகக் கட்டுமரத்தை கரைநீரோட்டம் இழுத்துச் சென்றுவிடும்.
Saturday, 15 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 11: விரல் நுனியில் இருக்கும் கண்
வெள்ளக்காடாக விரிந்துகிடக்கும் உப்புநீர்ப் பெருவெளி. உட்கடலுக்குள் போய்விட்டீர்கள் என்றால் இதுதான் உங்கள் காட்சி அனுபவம். ஆனால் ஒரு கடலோடியைப் பொறுத்தவரை அப்படியல்ல. கடல் பெருவெளியிலும் ஊர்கள் இருக்கின்றன. கோயில், குளம், தெருக்கள், கட்டிடங்கள், சாலைச் சந்திப்புகள் என நில எல்லைகளை நாம் நினைவில் வைத்திருப்பதுபோல, தான் புழங்கும் கடல் கடலோடிக்கு அத்துப்படி.
Saturday, 8 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 10: ஜி.பி.எஸ். பிதாமகன் யார்?
கடலோடிகளின் இடம் கணிக்கும் உத்திக்கு முத்தாய்ப்பாக நிற்பது தாழ்த்துவலை என்னும் பழந்தொழில்நுட்பம். தனி அடையாளம் ஏதுமற்ற கடல் பெருவெளி நீர்ப்பரப்பில், வலையை விரித்துவிட்டு (அமிழ்த்தி வைத்தல்) கரை திரும்பிவிடுவது; ஓரிரு நாட்களுக்குப் பிறகு கடலுக்குள்ளே வலை விரித்த இடத்துக்குச் சென்று குறிப்பிட்ட இடத்தில் துல்லியமாக நங்கூரமிட்டு வலையை இழுத்து மீன்களைக் கழித்துவிட்டு, வலையை மீண்டும் கடலில் அமிழ்த்திவைத்துவிட்டு அறுவடை மீனுடன் கரை திரும்புவது. தூண்டில் மீன்பிடித் தொழிலிலும் மீன் அறுவடைக்களங்களைக் குறிப்புணர்ந்து கணித்துப் போடுவது உண்டு. இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிறது?
Saturday, 1 July 2017
கடலம்மா பேசறங் கண்ணு 9: மச்சம் பிடித்தவனுக்கு மிச்சம் இல்லை
பஞ்ச கால உணவு, மீனவர் உணவைப் பற்றிப் பேசுகையில் ஆமை முட்டை பற்றியும் பேச வேண்டும். கோடைக் காலத்தில் அலைவாய்க்கரை மணல் தேரிகளில் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளைச் சேகரித்து வீட்டுக்குக் கொண்டுவருவோம். கோழி முட்டை போலன்றி ஆமை முட்டை சவ்வு போன்ற உறையால் அமைந்தது. முழுமையாக வேகவைத்த முட்டை சுவைமிகுந்த புரத உணவு. பச்சையாகவும் குடிக்கலாம்.
Saturday, 24 June 2017
கடலம்மா பேசறங் கண்ணு 8: மனதைவிட்டு அகலாத சுவை!
பஞ்ச காலத்தில் கத்தோலிக்க நிவாரண சேவை என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து உணவு தானிய, பால் மாவு, எண்ணெய்ப் பொருட்கள் வருவதுண்டு. ஒரு கத்தோலிக்க மறை மாவட்டத்தின் தலைமையிடத்தில் இவற்றை இருப்புவைக்கச் சேமிப்புக் கிடங்குகளை அமைத்திருப்பார்கள். தாய்-சேய் நலத் திட்டம், வேலைக்கு உணவுத் திட்டம், பள்ளிகளில் நண்பகல் உணவுத் திட்டம் என்பதாகப் பல பெயர்களில் அவை கடற்கரைக்கும் வரும்.
Saturday, 17 June 2017
கடலம்மா பேசறங் கண்ணு 7: பஞ்ச கால ஞாபகங்கள்
சமூக வரலாற்றில் பெரும் பஞ்சங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. காரணங்கள் ஒன்றிரண்டல்ல. பஞ்சம் ஒரு வரலாற்றுப் படிப்பினை. சமூகத்தின் ஆகச் சிறந்த மீளும் பண்புகளும் ஈனமான சுரண்டல் – அடக்குமுறைப் பண்புகளும் வெளிப்படும் காலமும் அதுதான். பஞ்சத்தைத் தொடர்ந்து மக்களின் உணவுமுறையில் பெரும் திருப்பம் நிகழ்வதும் உண்டு.
Saturday, 10 June 2017
Saturday, 3 June 2017
Saturday, 27 May 2017
Saturday, 20 May 2017
Saturday, 13 May 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 02: பேரிழப்பு தந்தது என்ன?
அக்டோபர் 26, 2012. அது எங்கள் குடும்பத்துக்குத் துயரம் தோய்ந்த நாள். என் மைத்துனரின் மகன் லெராய், கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் படித்துவந்தான். தனது பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இறச்சகுளம் பகுதிக்கு அவன் இயற்கைச் சுற்றுலா சென்றிருந்தான். ஒரு நண்பனின் வீட்டருகே ஆற்றில் மூழ்கி நால்வரும் இறந்துபோயினர். நான்கில் இரண்டு சடலங்கள் கைகோத்த நிலையில் நிகழ்விடத்துக்கு 100 மீட்டர் கீழே மூழ்கியெடுக்கப்பட்டன. இவனும் அதில் ஒருவன்.
Saturday, 6 May 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 01: முன்னோர்களின் கால்களைத் தழுவிய அதே நீர்
தொடுவானம் கதிரவனைச் சிவப்பினால் போர்த்த முயலும் அந்திவேளை. அலைவாய்க்கரையில் நின்றவாறு கடலின் பரப்பை நீங்கள் வியந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கணத்தில் தண்ணென்ற குளிர்ச்சியுடன் உங்கள் பாதங்களைத் தழுவி மீளும் கடல்நீர்,…ஒரு கட்டத்தில் துருவப் பனிமலைகளின் ஏதோவொரு பனிப்பாளத்தின் ஒரு பகுதியாக இருந்தது; பெருங்கடல் நீரோட்டங்களாய் உலகளாவிய பயணத்தில் இருந்தது; பஞ்சுப் பொதிகளென நீராவி வடிவத்தில் மேகமாக மாறி, வான்முகட்டைத் தழுவியலைந்தது; மலைமுகடுகளில் கனிந்து மழையாய்ப் பொழிந்தது; சுனை, சிற்றோடை, சிற்றாறு, பேராறு எனப் பெருகி, திணைதோறும் பலவகை நிலப்பரப்புகளைத் தழுவியணைத்து, தங்கி நின்று, கழிவெளிகளில் கலந்தது; மீண்டும் தாய்வீடு சேர்ந்தது.
Tuesday, 28 February 2017
Sunday, 19 February 2017
எண்ணூர் முதல் இனயம் வரை: காயப்பட்ட கடற்கரை
சென்னை மெரினா கடற்கரை இன்று புதிய அடையாளம் பெற்றுவிட்டது. ‘தை எழுச்சி’க்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. ஃப்ளோரிடாவுக்கு அடுத்தபடியாக உலகின் நீளமான கடற்கரை மணல்வெளி. கி.பி. 1908-ல் இன்றைய சென்னை துறைமுகத்துக்கு முன்னோடியாகக் கடல் பாலம் நிறுவப்பட்டது முதல் கரைக்கடல் நீரோட்டங்களின் போக்கில் ஏற்பட்ட மணல் குவிவால் உருவானதுதான் மெரினா. 1978-ல் இயங்கத் தொடங்கியது விழிஞம் மீன்பிடித் துறைமுகம். அதற்குத் தென்கிழக்காக ஐந்து கி.மீ. நீளத்துக்கு ஒன்றரை கி.மீ. அகலத்தில் புதிய நிலமும் மணல்வெளியும் உருவாயிற்று. பாண்டியரின் துறைமுக நகரமாக விளங்கிய கொற்கை, இன்று கடல் விளிம்பிலிருந்து ஐந்து கி.மீ. விலகியிருக்க, கடல் பின்வாங்கி விட்டது.
Tuesday, 31 January 2017
Wednesday, 13 May 2015
Sunday, 18 January 2015
கடலோர வனங்கள் எங்கே?
இயற்கை என்பது நுட்பமான சங்கிலி, எங்கே அறுபட்டாலும் பெரும் பிரச்சினைதான்.
தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவும் எதிர்கால மாகவும் அமைபவை திணை நிலமும் மொழியும்தாம். திணை நிலம் அதன் நீர் பெறுமதியால் அமைவது. தமிழகத்தின் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் வடிநிலங்கள் நெய்தல் நன்னீராதாரங்களில் சங்கமிக்கின்றன. வடக்கே பாலாறு தொடங்கி தெற்கே குழித்துறையாறு வரை அத்தனை ஆறுகளும் கடலோடு கலந்து, கரைக்கடலில் மீன்வள உற்பத்திக்குப் பங்களிக்கின்றன. கடலில் கலப்பதற்கு முன்பாக, இந்த ஆறுகள் நெய்தல் நீராதாரங்களைச் செழுமைப்படுத்துகின்றன. முன்பு, இந்த நிலப்பரப்புகளில் காயல்கள், கழிமுகங்கள், கண்மாய்கள் இயல்பாக இணைக்கப்பட்டிருந்தன. நம்முடைய முன்னோர்கள் பயிரிடுவதற்காக அணை களை நம்பியிருக்கவில்லை. கண்மாய் சார்ந்த விவசாயம்தான் அன்று தமிழ் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துவந்தது.
Friday, 26 December 2014
நிலம் நிகழ்த்தும் சுனாமி (இந்து தமிழ் திசை நடுப்பக்க கட்டுரை)
சுனாமிப் பேரழிவுக்குப் பிறகான 10 ஆண்டுகளில் மீனவர் வாழ்வு மேம்பட்டிருக்கிறதா?
நேற்று அடித்து ஓய்ந்தது போலிருக்கிறது 2004-ல் இந்தியப் பெருங்கடல் சுனாமி. நிலநடுக்கம், புயல், வெள்ளப்பெருக்கம் போன்ற பேரிடர்கள் நமக்குப் பரிச்சயமானவையே. எனினும், சுனாமி என்னும் சொல் 2004-ல்தான் நம் மொழிவழக்கில் நுழைந்தது. நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அந்நிகழ்வும் அதன் தாக்கமும் நமக்குப் புதியவை.
Wednesday, 24 September 2014
The Sea and the Coast V. Geetha
The Sea and the Coast
V. Geetha
(Address at a seminar on Nature at
NCBS, Bangalore)
Thursday, 11 September 2014
Tuesday, 11 September 2012
Subscribe to:
Posts (Atom)
விடியலை நோக்கி 2008 நேர்காணல்
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
* கையறுநதி / - வறீதையா கான்ஸ்தந்தின்/ கடல்வெளி வெளியீடு/ பக்கங்கள் : 196 விலை : ரூ. 220/-. நூல் அறிமுகம் : செ.கா. --------------------...
-
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
#300daysafterCycloneOckhi #VareethiahKonstantine Mass casualties in the deep sea due to Cyclone Ockhi 2017 expose the fatal inad...





































