Tuesday, 23 July 2019

கஜாப்புயலும்.../ வறீதையா /Ram Gopal (புத்தகம் பேசுது) பதிவு.


கஜாப் புயலும் காவிரி டெல்டாவும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், நல்ல உள்ளங்கள், அரசு இயந்திரம் என பலரும் படிக்க வேண்டிய ஒன்று. 


Saturday, 29 June 2019

சூழலியல் கரிசனத்தின் உரைகல் | வறீதையா கான்ஸ்தந்தின்



(சு.தியடோர் பாஸ்கரனின் 'கையிலிருக்கும் பூமி': சில குறிப்புகள்)
[நூல் மதிப்புரை: சு. தியடோர் பாஸ்கரன், கையிலிருக்கும் பூமி. உயிர்மை. 2018. பக்கங்கள் 560 ; விலை: ரூ.600].

Thursday, 20 June 2019

படித்ததில் பிடித்தது PEPPERS TV https://youtu.be/_URGuI-WBxA

https://youtu.be/_URGuI-WBxA

கடற்கோள் காலம் | வறீதையா.

கடற்கோள் காலம் | வறீதையா | எதிர் வெளியீடு | ISBN. 978-93-87333-59-8 | 2019 | பக். 134 |₹140/-

அமேசானில் (Amazon.in) பெறுவதற்கு:
https://www.amazon.in/dp/9387333590/ref=mp_s_a_1_1?keywords=9789387333598&qid=1562851051&s=gateway&sr=8-1

Monday, 17 June 2019

1000 கடல்மைல் | வறீதையா | தடாகம் -ககடல்வெளி| 2018.

எல்லோரையும் கவர்ந்திழுக்கும் கடல், வரலாற்றுக்கு முன்பே அதனுடன் ஒட்டி உறவாடி வாழ்ந்துவரும் கடலர்களுக்கு மட்டும் பேரச்சம் தருவதாகிக் கொண்டிருக்கின்றது. இயற்கைச் சீற்றங்கள் மனிதப் பேரிடர்களாக அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன.

-வறீதையா கான்ஸ்தந்தின்

Monday, 27 May 2019

The ENAYAM CURRENTS | VIDEO DOC | Vareethiah

https://youtu.be/nes0B0N6vcI
This @7 min. video doc. by Vareethiah Konstantine explores the environmental issues connected to the estwhile Enayam ICTT Project.

A joint venture of kaTalveLi - Merry.

SOLAS AND ARTISANAL FISHERMEN: LESSONS FROM OCKHI


Mass casualties in the deep sea due to Cyclone Ockhi 2017 expose the fatal inadequacy ofour Early Warning System, colossal failure in Search and Rescue operations and lacunae in on board safety protocols in mechanised fishing vessels. What is the take home lesson.


0.0. Prelude

0.1. Reckoning with Reality

Cyclone ‘Ockhi 2017’ took away over 230 lives (from Tamil Nadu alone) in the deep sea. Majority of these deaths occurred in post cyclone situation largely due to failure in Early Warning System (EWS) and Search and Rescue operations (SAR). The episode once again exposed the gap in on board Sea Safety Protocols and Communication devices in the small scale deep sea Mechanised Fishing Vessels (MFVs).

0.2. Invisible Disaster on Invisible People

As for the maritime communities, Cyclone Ockhi was ‘an invisible disaster on an invisible people’. The casualty of this mid sea disaster was the bread winners of fishing families. In a situation where fisherwomen are alienated from small scale fishery economy, the reconstruction of livelihood for these destitute is a great challenge. Could these deaths have been averted? Was it a collective failure? What are the lessons learnt?

0.3. Cultural Sensitivity and People’s Participation.

I have had the opportunity to travel the length and breadth of the Indian peninsular coast and the Andaman. With my post tsunami experience in Tamil Nadu, I may safely make this statement: ‘Disaster reconstruction involves, among others, two salient features- Cultural Deconstruction andPeople's Participation’. I had seen for myself, 2001 Bhuj earth quake reconstruction is a positive example where 'Sensitivity to Ethnic Life' and 'Participatory Development' were the guiding principles. I believe, these principles equally apply to disaster mitigation.The fisher folks are invisible in literature, absent from history and remain geo-politically and economically marginalized. One’s capacity to respond to a disaster situation and to participate in reconstruction is largely a function of both these factors.

0.4. Technologisation and Tribal Instinct 

Death and uncertainty are the seminal elements of traditional maritime life. One of the chief attributes of the tribal instinct is its keen sense of nature. However, his traditional faith makes him believe that ‘he can tide over any danger and get to the shore safely’. This is a historical hangover he must quickly relieve himself of. Fishing within a distance coverable in day light hours was commonplace in pre-technology times; high tech, high investment, multiday deep sea venture is common practice today. Technologisationhas changed the face of marine fisheriessector. It follows that traditional perceptions of safety needs a thorough overhauling. It is time the seafaring artisans reckoned with this reality. 

0.5. Working smart at sea

A smart seafarer has got to think smart in terms of safety of human life and that of his vessel, his life time investment. Safety of life at sea is not about high investments and high end technologies; it is about a basic change in attitude. The causes for negligence in on board safety practices need to be addressed (with empathy) to plug the leak. This also calls for an objective, retrospective analysis of the Governments' ‘Disaster Preparedness' and their 'Political will' to respond during the 'Golden period' pertaining to a disaster.

1.0.Traditional Deep Sea Fishermen

1.1. The Thoothoor Fishermen.

After the Sri Lankans, the Thoothoor fishermen are the most innovative/ efficient deep sea fisher folks in south Asia. They have got a long tradition of Multi-day fishing cruises with in Kattamarans/ country boats. These fishermen who are smart with latest fishing technologies are not negligent in basic sea safety protocols. Unlike Sri Lankans, are ill equipped with communication devices. This is an area that requires the governments’ empathy. 

1.2. Protein Demand and Marine Fisheries

Mechanised Fishing in India was introduced in India in 1956 (II FYP/ Indo Norwegian Project, Indo- Belgian Project) with thrust on trawling, Mechanised Trawlers were introduced in Tamil Nadu (Colachel and Thoothoor in KKDt). Deep sea fisheries programme was initiated in 1985. Mechanised Fishing, with a fleet strength of @80,000, constitutes a major industry as small scale fisheries sector. Over the decades, fishing pressure in near shore waters has increased due to excessive investment in fleet strength (MFVs, OBM Boats) and sharp fall in CPUE rendering fishing a thankless venture. Annual Fish production has been plummeting over the years with growth rate in fish landing decimating from 6.3% (1970-’71) to 0.0% (2010-’11). Rising crises in near-shore waters is further aggravated by destructive fishing methods (Trawling/ Purse seining), marine pollution, water policy and climate change/ El Nino Effects. The union and state governments have recognised deep sea fishing as a tangible solution to issues of cross border fishing in international waters and has launched deep sea fisheries programme in the last couple of years. The programme focuses on using the fishing expertise of Thoothoor fishermen to train other fishermen in Tamil Nadu.
The domestic need for fish protein is on a steady rise while <50% of this need is catered to. Over 50 lakh workforce isengaged in Indian small scale fisheries. Each of these fishermen provides 16 jobs on land through backward and forward integration. 

1.3. Deep Sea Fisheries as Small Scale Enterprises.

The Indian Small-scale deep sea fisheriesismainly credited to a fleet of @700 MFVs from Thoothoor region with a work force of @7000. Venturing all over the west coast from Kannyakumari to Okha they fish in the far reaches of the ocean. This fleet engages in bottom lining and gill netting in the deep seas; part of this fleet uses pelagic lines in open ocean (with depths >1000m). Each cruise (of a MFV) takes 25 to 40 days. A 60ft Deep sea MFV with a pay load of 40 tonnes (Ice blocks alone weighs @20t) and engine capacity of 120HP, could achieve a maximum speed of 8knots/hr in a normal weather. It employs highly efficient and resource friendly fishing techniques like light, baitless baits, live baits etc. Long lining, one of their specialities, involves the use of over 1000 hooks with swivels in a single line. Major fishery of this deep sea fleet includes sharks and rays, yellow fin tuna, skip jack tuna, snappers, groupers, marlin, Malabar trevally, sail fish, sword fish and emperor.The target fishery, fishing grounds and fishing methods of these migrant fishermen are neither competition with local fisher folks nor is it conflicting with national interest in terms of ecology/biodiversity.

1.4. Marine Fisheries- a complex subject.
Fisheries remain a 'State Subject'; however, the maritime states have their jurisdiction up to 12NM. Framing/ reviewing deep sea fisheries policy is a complex exercise enlisting the participation of/ endorsement from over 14 Union /State Govt. departments and, some international regulations too. 

1.5. Legal Instruments


Article 116 of the UNCLOS (1982) recognises the sovereign right of citizens from maritime nations to fish on the high seas.  Article 6.18 of the FAO CCRF (1995) asserts the sovereign rights of fishermen to engage in subsistence / small scale/ artisanal fisheries and their preferential access to resources in waters of their national jurisdiction. Healthy standards in fishing operations, integration of SAR systems with fishing operations and access of fishing vessels to insurance coverage are categorically addressed inArticle 8.1.5, 8.1.6 and 8.2.8 of the above document. The scope of IC-SOLAS, signed after the 1912 Titanic episode, is ‘safety of life at sea’.


1.6. The Indian EEZ and Deep Sea Fishermen.

India has got an EEZ of 2.02million SqKm; there is an additional area up to a distance of 150NM of international waters. In 2011 India has placed a request to the UN to declare this area as part of its EEZ. Though India has stopped LoP Programme, 193 international fishing vessels continue to engaging in ‘Indiscriminate, Unregulated, Unreported and Destructive’ fishing (IUUD) in our waters with an Indian licence/permit under the ‘Joint Venture’ (1991) programme. The wealth of marine fishery needs to be tapped to the full, to meet the ever rising domestic demand for fish protein. Besides, it is an employment provider, foreign exchange earner. Policies/ programmes with thrust on optimal utilisation of fishery resources beyond 50m depth will fortify the nation’s food security, public health and economy.


2. Cyclone Ockhi- An Introspection.


2.1. A Few Basic Questions


2.1.1. Given an early warning, could the MFVs avert the deep sea disaster?To some extent, yes.On the day of Ockhidisaster the MFVs claim, they were within a distance of 35 to 150NM. With a three day cyclone warning in place, MFVs could cover @500NM (at the mercy of weather) and safely berth at the nearest coast. The fishermen are very familiar with the islands and even with an 18hr warning, most of the MFVs and OBMs could have get to the shore.


2.1.2. The fishermen complain,a mere weatherwarning was of no avail…Their concern is genuine. A mere cyclone warning could be counter-productive.Geo spatial information pertaining to wind speed, direction and path of the cyclone are critical in decision making.The Sri Lankan MFVs got the technical information in time and could save themselves from the onslaught.


2.1.3. Was the Post Cyclone SAR operation effective?Fishermen caught in the cyclone and rescued/ landed claimed that the casualties on the strike of cyclone were nominal and that most deaths occurred in the next couple of days due to lapse in SAR. Negligence in life safety measures on board compounded the heavy casualties.

2.1.4. Do the Deep Sea MFVs have devices to receive early warning /weather updates?No.VHF can receive signals within 30nm in a normal weather.HF Radios can receive signals up to a distance of 200nm.RTM/Satellite Phone can reach any distance. SSB Radio would be handy to receive regular weather updates. The DAS is at experimental level only.Sri Lanka issues licence for satellite phone to its deep sea MFVs. They got the cyclone warning in time and saved themselves from the onslaught. Not a single MFV was caught in the cyclone.


2.1.5. Ten months after the disaster, what are the corrective measures from the Governments?The interventions of TN State Govt. are mainly focussed on the basic safety standards, life-saving and communication devices for deep sea MFVs. The Govt. is working with national agencies including ISRO in this regard.Other safetyrequirements are:High Bulwark, Emergency Bilge Pump,high bulwark and Hatch cover ceiling lock (to handle water ingress; Bilge Keels rolling effect and draft; Fire Safety arrangements like Fire Pump, CO2 cylinder, Dry Chemical Powder.


2.2. Gaps in Policies and Practice

2.2.1. Freakish Cyclone or Fatal Error?

Disaster management is essentially a political process in which the governments and people are the prime players. Cyclone Ockhi turned into a major disaster mainly due to the failure in early warning system. Unlike an earth quake or an avalanche, we do have a time reliefin the case of cyclone which gives us a warning in advance. Conventional technologies provide for a minimum of three day warning in India. The Indian Meteorological department (IMD) claimed that only 18 hour warning was possible due to its freakish nature. Ockhi is the second such disaster in the last 125 years. ‘It was a fatal error of judgement on the part of IMD’, hold the social activists.

2.2.2. Communication Failure

Secondly, there was a colossal failure in communication (NDMA, TNSDMA). “...the cyclone warning was delayed; the delivery of warning was ineffective;in a war like situation, a war-like mobilisation and action were missing...', holds Devasagayam, a former IAS officer. The extant MMD/ DG Shipping rules don’t permit the use of advanced communication devices in deep sea MFVs.

2.2.3. Lapse in SAR.

There was a lapse in SAR operations.There was failure in Overall SAR Coordination (NDRF).The Report of the Public inquest on Cyclone Ockhisays, “Ockhi  experience proved that the Tamil Nadu Disaster Management Authority (TNSDMA) and its agency are not fully operational and functional.” The functioning of the Coastal Disaster Risk Reduction Force was invisible. Further, centre- state Coordination in Disaster Management (like the one seen in Odisha 2013 CyclonePhaelin) was prominently missing.Odisha which lost nearly 13000 lives in the 1999 super cyclone, moved over 11,25,000 people to safety. The casualty was only 11.

2.2.4. Traditional Expertise and Advanced Technologies

The governments failed (or was unwilling) to utilise the traditional knowledge of the fishermen in SAR operations.Satellite imageries were apparently not utilized in SAR operations (Remote Sensing/ GIS). Fishermen who were in distress complained about poor response to DAS/ SOS calls. It seems no lessons have been learnt from Cyclone Phean 2009. It must be noted here, that the National Disaster Management Act (2005), National Disaster Management Policy (2009) and National Disaster Management Plan (2016) are devoid of protocols for mid sea disaster management.



2.2.3. The Deep Sea MFVs
As for the safety protocols and practices in the deep sea MFVs, much needs to be done. In the first place sea safety culture and practices are wanting among artisanal fisherfolks.Lack of basic safety provisions on-board (Life jacket, Life buoy, Life Raft…) is a manifestation of this negligence. Non-compliance to safety specifications in deep sea fishing vessel construction (Design) has proved fatal. There are also irregularities with reference to vessel registration and insurance practices. Unlike the Sri Lankan Mechanised Fishing vessels, the Thoothoor MFVs lack state-of-the-art communication gadgets on board. The crew in Indian MFVs lack the expertise/ training in modern weather watch system and safety practices. Some of these factors add to disaster casualty.



3.0. Road Ahead

In the light of the above, here are some pointers for future course of action:
3.1. The NDMAct (2005)/ Policy/ Plan documents to address mid sea DM. Review on the effectiveness of NDRForce’s response with reference to Cyclone Ockhi.
3.2. Ensuring the participation of every State Govt. as partner and beneficiary of the National Cyclone Management Programme.
3.3. Streamlining the Coastal Disaster Risk Reduction Project (CDRRP).
3.4. Exploring the process for licence for satellite phoneto deep sea MFVs under the regulations of MMD (DG Shipping).
3.5. Unscrupulous enforcement of Registration and Insurance for every Indian MFV to be enforced.
3.6. The Governments may explore the prospects of a comprehensive insurance policy for MFVs all over India to ease the burden of artisanal fishermen.
3.7. Installation of SSB Radio and Distress Alert System (DAS) in every deep sea MFV.
3.8. Broadcast of Weather watch news in regional languages also.
3.9. Ensuring compliance of MFV building units all over India to MMD approved standards of construction design (that satisfies basic safety norms).
3.10. Periodic survey/ certification of sea worthiness of vessels.
3.11. Opening a regional unit of DM/ Rescue Coordination at Thengappattanam Fishing Harbour (To create a Registry of Geo-positions of fishing locations of deep sea MFVs; to maintain a movement log for MFVs at shore).
3.12. Basic training/ Certification for deep sea fishermen on SOP in sea safety and communication.
3.13. Establishment of Civilian unit of Maritime/ Coastal Warden with deep sea fishermen for mid sea SAR operations (The recent example of the Govt. of Kerala is worth emulating).
3.14. Special recruitment of traditional sea farers in Coast Guard.
3.15. Technology development for Location and Tracking of MFVs; RFID for every vessel).
3.16. Bringing the MFVs/ OBM Boats under satellite live mapping.
3.17. SAR: Helipad, helicopter, hovercraft, sea planes, speed boats for rescue at the SAR Coordination centre.
3.18. Periodic interactions with fishermen to understand their needs and to assess ground realities.
                   
                                                                    
-------------------------
Acknowledgements: The following persons are gratefully acknowledged for consultancy on sea safety protocols: Capt. Retesh Sinha, Mr.ManuAgarval (Chief Officer) and Mr. Jefferson Marcose (Senior Engineer), Passenger Ship; Mr. Thomas Soosai Antony (FG Master) and Mr.AlbertSilvarian (Engineer), Mercantile Vessel; Mr.MichaelNayagam (Rtd skipper) andMr. Maria Vijayan (Skipper), Mr.Bosco, Mr. Rajesh (Engineers), fishing vessel; Mr.Michael Faraday and Mr. Pius (crew heads), deep sea MFV; Mr.H.JohnBritto (Ship Location and tracking Software Specialist); Mr. Cyril Alex (Software Consultant and writer).

Sunday, 26 May 2019

THE INNER CHILD AT PLAY | Literary Review


BOOK: THE PALE TWILIGHT (Tamil)
AUTHOR: KUMAARANANTHAN
TRANSLATORS: S.Vincent & Lawrence
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
Kumarananthan has chosen to take the road less traveled, unveiling new vistas, addressing the margins within the margins, namely the social deviants, and the issues thereof... It’s time the world stood up and spoke for them. What else could initiate such a monumental mission than literature?

Saturday, 18 May 2019

மீனவர்கள் சத்தமாகத்தான் பேசுகிறார்கள், உங்களுக்கு கேட்கிறதா?

நூல்: கடற்கோள் காலம் | வறீதையா 
நூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யா.
மீனவர்கள் சத்தமாகத்தான் பேசுகிறார்கள், உங்களுக்கு கேட்கிறதா? 
2018 ஜூலை  | எதிர் வெளியீடு.

Wednesday, 1 May 2019

பேரிடர் மேலாண்மை- பேசவேண்டிய அரசியல். / அருண் நெடுஞ்செழியன்


நூல் மதிப்புரை:
கஜா புயலும் காவிரி டெல்டாவும்/ வறீதையா கான்ஸ்தந்தின்
••••••••••••••••••••••••••••••••••
கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னைப் பெருவெள்ளம், வர்தாப் புயல், ஓக்கிப் புயல்   தற்போது கஜாப் புயல் என அடுத்தடுத்த நான்கு பேரிடர்களை தமிழகம் எதிர்கொண்டது. இயற்கைப் பேரிடரிலிருந்து தப்பிப் பிழைத்த மக்கள்கூட,  ஆட்சியாளர்களின் செயல்படாத தன்மை எனும் செயற்கை பேரிடரில் சிக்கி துன்புற்றுவருவதை கண்ணுற்றுவருகிறோம்.
சென்னை வெள்ளத்தின்போதும் சரி, ஓக்கி புயலின்போதும் சரி, அரசு, சமூகத்தைக் கைவிட்டதால், தங்களைத் தாங்களே காத்துக் கொள்கிற கையறு நிலைக்கு குடிமைச் சமூகம் தள்ளப்பட்டது. பேரிடர்க் காலச் செய்திகளை நீர்த்துப் போகச் செய்வதற்கு, ஆளும்கட்சி மேற்கொள்கிற பொய் உறுதிமொழிகள் பேரிடர் குறித்த ஊடக விவாதங்களை முடித்துவைக்கிறது. அதற்கடுத்த பேரிடர் வரையிலும் நிலை இதுதான்!

பேரிடர் நிகழ்வை ஆவணப்படுத்துவதில் தமிழ்ச்சமூகம் பின்தங்கியிருப்பது இதற்கொரு  முக்கியக் காரணமாக உள்ளது. பேரிடர்க் கால ஆவணப்படுத்தல் என்பது கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டவும் மீளாய்வு செய்வதற்கும் நம்முன் உள்ள வரலாற்று ஆதாரம் ஆகும். அவ்வகையில் 2018 நவம்பர் 15இல் தமிழகத்தின் ஏழு மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கஜா புயல் பாதிப்பு  குறித்து முக்கிய ஆவணமாக தோழர் வறீதையா கான்ஸ்தந்தின்  “கஜா புயலும் காவிரி டெல்டாவும்” என்கிற தலைப்பிலான இந்நூல் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.

கடற்கரை பேரிடர் மேலாண்மை குறித்து தொடர்ச்சியான பகுப்பாய்வுகளை மேற்கொண்டுவருகிற தோழர் வறீதையாவின், கஜா புயல் பாதிப்பு பற்றின கள ஆவணப் பதிவானது, டெல்ட்டா மாவட்ட மருத நில, நெய்தல்  நில மக்களின் சமூகப் பொருளாதாரத்தை பேரிடர்கள் எவ்வாறு புரட்டிப் போட்டுள்ளது என்பதை ஒருங்கிணைந்த வகையில், உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்துகிறது.

நூலின் பெரும்பகுதியானது (முன்னோட்டம் மற்றும் கொடை அரசியல் தவிர) பேரிடர் பாதிப்பை எதிர்கொண்ட எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை பதிவு செய்கிறது. நிலத்தில் ஏற்பட்ட பாதிப்பு (குறிப்பாக தென்னை விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணை), கழிமுகம் மற்றும் கடற்கரையோர மீனவ  கிராமங்களில்  புயல் ஏற்படுத்திய பாதிப்புகளையும் அரசின் மீதான  மக்களின் ஆவேசத்தையும் ஆவணப்படுத்துகிறது.

கடல் நிலம் கஜா, சுடுகாடாகும் டெல்டா நிலம், பாலைவனமாகும் பாக் கடல், இயற்கை சீற்றமும் கொடை அரசியலும் என நான்கு தலைப்புகளில் புயல் பாதிப்பை எதிர்கொண்ட தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள், பேரிடர் மேலாண்மை மீதான பகுப்பாய்வு மேற்கொண்டுள்ளார்.
பேரிடர் ஆயத்தக் கட்டத்தைப் பொறுத்தவரை, கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு துரிதமாக செயல்பட்டாலும் புயலின் திசைபோக்கு குறித்து தெளிவான எச்சரிக்கை விடுக்கப்படாததால் மன்னார்குடி, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட உள்பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டதை இந்நூல் உறுதிப் படுத்துகிறது. கடந்த 2017 ஓக்கிப் புயலின்போது முன்னெச்சரிக்கைக்  கட்டமைப்பின் தோல்வியால் பலநூறு மீனவர்கள் நடுக்கடலில் புயலில்  சிக்கி பலியானதை கருத்தில் கொண்டால் பேரிடர் முன்னெச்சரிக்கை கட்டமைப்பில் அரசு இயந்திரத்தின் பலவீனம் மீண்டுமொருமுறை விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

பேரிடருக்கு பிந்தைய நிவாரணம் மற்றும் மீள் கட்டமைப்பைப் பொறுத்தவரை, அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதை கள ஆய்வுகளின் அடிப்படையில் இந்நூல் விரிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

புஷ்பவனம் மற்றும் அதிராம்பட்டினம் கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பேரிடருக்குப் பிந்தைய நிவாரணக் கட்டமைப்பிற்கும் எதார்த்த இழப்பிற்குமான இடைவெளியை நுணுக்கமாக பகுப்பாய்கிறது. புயலால் சேதமான படகுகளுக்கு (அதுவும் சொற்பமான) இழப்பீடு வழங்குகிற அரசு வலை சேதத்தை இழப்பீட்டுக் கணக்கில் கருத்தில் கொள்ளாமல் இருப்பது, சேத மதிப்பீடு குறித்தான அரசின் தெளிவற்றக் கொள்கையை அம்பலப்படுத்துகிறது.

மேலும் பேரிடர் சேத மதிப்பீடு தொடங்கி, பேரிடர் நிவாரணம் மற்றும்  மீள் கட்டமைப்பு ஆகிய அனைத்து செயல்பாடுகளிலும்  முறையான கண்காணிப்பு அற்ற போக்கால் பெரிய அளவிலான ஊழல் மோசடிகள் வாடிக்கையாகிறது. ஒவ்வொரு பேரிடரின்போதும் பேரிடர் சேத மதிப்பீட்டு அதிகாரி உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர் பேரிடர்க் கால நிதியை சுருட்டுவதை பரவக்கோட்டை விவசாயி ராஜேந்திரனின் குரலின் வழியே, நூலாசிரியர் அம்பலப்படுத்துகிறார். சேத மதிப்பீட்டில் தெளிவற்ற அரசோ, பேரிடர் மறுகட்டுமான பணிகளுக்கு தனியார் அறக்கட்டளை நிறுவனங்களை கைகாட்டிவிட்டுத் தனது பொறுப்பில் இருந்து நழுவிச் செல்கிறது.
முன்னதாக பசுமைப் புரட்சியின் வன்முறை, தொழிலாளர் பற்றாக்குறை, நீர் பற்றாக்குறை போன்ற சிக்கல்களால் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிற  டெல்டா விசாயிகளுக்கு கஜாப் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை  .விவசாயிகள் நடராஜன் மற்றும் பாலமுருகனுடனான உரையாடல் விவரிக்கிறது.

வெள்ளப்பள்ளம் கள ஆய்வானது கடற்கரைக் கிராமப் பெண்களின் மீதான சுமையை விவரிக்கிறது. குடும்பச் சுமை போக, மீன் விற்க சந்தைக்கு போவது, படகை தள்ளுவது போன்ற பெண்களின் மீது ஆணாதிக்கச் சமூகம் சுமத்தியுள்ள வேலைப் பிரிவினைத் துயரத்தை ஜெயாவின் குரல் வெளிப்படுகிறது.
‘பாலைவனமாகும் பாக் கடல்’ பகுதியில் பாக் ஜலசந்தியின் மீன்வளம் எவ்வாறு இறால் பண்ணைகளாலும் ரேஸ் மடி வலை, இழுவை வலை ஆகிய வலைகளால் சூறையாடப்படுகிறது என்பதை காளிதாசுடனான உரையாடலின் ஊடாகப்  பதிவு செய்கிறது. மீன் வளத்தை மொத்தமாக சூறையாடுகிற வலைகளை தடை செய்யாத அரசுக்கும் சுருக்குவலை- லாஞ்ச் உரிமையாளர்களுக்குமான  அணுக்கமான  உறவுகள் எவ்வாறு நாட்டுப்படகு உரிமையாளர்களுடனான  முரண்பாடுகளுக்கு தோற்றுவாயாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. பேரிடர்க் கால தன்னார்வ உதவிகளைக் கடந்து அப்பகுதியின் சமூகப் பொருளாதார நெருக்கடிகளை ஊடுருவிப் பார்த்தால் சிக்கலின் அனைத்து பரிமாணத்தையும் தொகுத்துக் பார்க்க இந்த உரையாடல் உதவுகிறது.

இறுதியாக ஓக்கி புயல் மற்றும் கஜாப் புயலில் தொண்டு நிறுவனங்கள் கள்ள மௌனத்திற்கு பின்னாலான அரசியல் பொருளாதார காரணிகளை கொடை அரசியல் பகுதியில் விரிவாக ஆய்வு செய்கிறது.

கஜா அல்லது ஓக்கி  புயல் பாதிப்பு என்பது இயற்கைப் பேரிடர் என்றாலும் சிவில் சமூகத்திற்குத் தலைமை தாங்குகிற ஜனநாயக குடியரசின் ஆட்சியாளர்கள் எவ்வாறு இந்தப் பேரிடர்களில் இருந்து சிவில் சமூகத்தை மீட்பதற்கு தனது உபரியை, தொழில்நுட்ப கட்டமைப்பைப் பயன்படுத்தத் தவறுகிறார்கள் என்பதை “கஜா புயலும் காவிரி டெல்டாவும்” என்ற கள ஆய்வின்  மூலமாக தோழர் வறீதையா ஆதாரங்களுடன்  உறுதிபட ஆவணப்படுத்தியுள்ளார். 

இப்படியான ஒரு ஆவணப்படுத்தல் மரபும் அதன் மீதான தொடர்ச்சியான அரசியல் உரையாடலும் அழுத்தங்களுமே அரசின் வர்க்க சார்பான செயல்பாடுகளை மக்களிடம் அம்பலப்படுத்தவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் நம்முள் உள்ள சிறு வாய்ப்பாக உள்ளது. ஒவ்வொரு பேரிடர்களின் போதும் பேரிடருக்கு முந்தைய ஆயத்தக் கட்டம், பேரிடர் கால மீட்பு மற்றும் நிவாரணம்,பேரிடருக்கு பிந்தைய மீள் கட்டமைப்பு/மறுவாழ்வு ஆகிய முக்கிய மூன்று கட்டங்களை ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்வதில் அரசு இயந்திரம் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவதற்கும், அரசு இயந்திரம் எந்த படிப்பினையையும் பெற்று மக்களை காக்க முன்வரவில்லை என்பதற்கும் இந்த பேரிடர் ஆவணமே எதிர்கால சான்றுகளாக அமையும். •

‘மீன்களுக்குப் பாஸ்போட் கிடையாது / நக்கீரன்.


நூல் அறிமுகம்: கஜாப் புயலும் காவிரி டெல்டாவும்’ / வறீதையா கான்ஸ்தந்தின்.

https://www.bbc.com/tamil/india-47948715

https://www.bbc.com/tamil/india-47948715

Monday, 11 March 2019

கடல்வெளி- பல்லுயிரியம்-இயற்கை வரலாறு | வறீதையா கான்ஸ்தந்தின்

Pillar/ Nagamalai / Madhurai/ 18 April 2018
I
 நாம் என்பது நரம்பு செல்களின் தொகையன்றி வேறில்லை.      -லூயி கேரல்.
 பூமிப்பரப்பின் கடந்த காலம் நினைவுப் படிவங்களாகவும் படிமங்களாகவும் பதிவுபெற்றுக் கிடக்கின்றன. 460 கோடி ஆண்டுகளில் பூமிக்கோளம் என்னென்ன மாற்றங்களுக்கு உட்பட்டன, நிலம் எப்படி அதன் இன்றைய தன்மையை அடைந்தது, நீருக்கு அதில் என்ன பங்கு இருந்தது, பருவநிலைகளும் நீரியல் சுழற்சியும் எவ்வாறு பல்லூரியிர்கள் தோற்றம் கொள்ளவும் பரவலாக்கம் பெறவும் காரணமாய் இருந்தன என்பதைப் புரிந்துகொள்ள நிலமும் மரபணுக்களுமே முதன்மை ஆதாரங்களாகும். நிலப்பரப்புகளில் கடந்த காலம் தொல்லியல் நில அடுக்குகளில் உயிர்த்திருக்கிறது; நிலத்தின் அகவையையும் அனுபவங்களையும் அவ்வடுக்குகளை ஆய்ந்து அறிந்துகொள்ளலாம். மனித இனக்குழுக்களின் கடந்தகாலம் தொகுப்பு நினைவுகளாக (collective  memory) அறியக்கிடைக்கிறது. உயிரினங்களின் கடந்த காலம்- தொல்லியல் வரலாறு- அவற்றின் மரபணுக்களில் நினைவுகளாகப் (genetic  memory) பதியப்பெற்றுள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளினூடாக தொல்லியல் போக்குகளுக்கும் இயற்கைச் சூழலுக்கும் இசைந்தவாறு உயிரினங்கள் எப்படித் தம் கட்டுமானத்தையும் இயக்கத்தையும் தகவமைத்துக்கொண்டன என்பதே இயற்கை வரலாற்றின் (natural  history) பிழிவாகும். ஒவ்வோர் இனமும் (species) குறிப்பிட்ட மரபணுக்களின் (genes) தொகை. பரிணாமவியலாளர் எர்ன்ஸ்ட் மேயரின் (Ernst Meyr) பார்வையில் ‘உயிரினம் என்பது தகவமைந்த மரபணுக்களின் தொகை’ (adaptive gene complex) (டாப்சான்ஸ்கி,1978); வேறு வார்த்தைகளில், மரபணுக்கள் பரிணாம நினைவுகளின் கருவூலம்.

பண்பாட்டுப் பரிணாமம்

உலகில் உயிர்ப்பரிணாமத்தின் 160 கோடி ஆண்டு காலத்தை 24 மணிநேரத்துக்கு ஒப்பிட்டால், மனிதர்களின் முன்னோர்களின் வரவு நள்ளிரவு 23:55 மணிக்கு நிகழ்ந்தது என்று கொள்ளலாம். தொல்லியல் காலங்களில் நெடும் உறைபனிக்காலம், கடும் வெப்பக்காலம், எரிமலைக்காலம், ஊழிக்காலம் என்பதாக பல கோடி ஆண்டுகள் மாறிமாறி வந்திருக்கின்றன. உயிரியல் பரிணாமம் இவை எல்லாவற்றின் பெறுமதி ஆகும். மனித குலத்துக்கு மட்டுமே உயிரியல் பரிணாமத்துடன் ‘பண்பாட்டுப் பரிணாமம்’ (cultural evolution) சாத்தியப்பட்டுள்ளது. முன்னங்கால் கைகளாகி உழைப்பு சாத்தியமானது, மூளை அளவிலும் அமைப்பிலும் மேம்பட்டது, நதிக்கரைகளில் தங்கி பயிர்த்தொழிலில் ஈடுபட்டது, நெருப்பையும் சக்கரத்தையும் கண்டடைந்தது, கலை, மொழி முதலான கூறுகள் தோன்றியது, அரசுகள் தோற்றம் கொண்டது- இவையனைத்தும் பண்பாட்டுப் பரிணாமத்தின் நீட்சி. சிலூரின், ஜுராசிக் தொல்லியல் யுகங்களில் உலகில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐந்தறிவுப் பேருயிர்கள் பூண்டோடு அழிந்தன என்றாலும் பூமிக்கோளம் ஒவ்வொரு முறையும் அவ்வூழிகளைச் சீரணித்துக்கொண்டு இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. ஆனால் பண்பாட்டுப் பரிணாமத்தை முன்னிட்டு உயிர்களில் உயர்நிலையை உரிமைகோரும் ஆறறிவு கொண்ட மனித இனம் நிகழ்த்திவரும் இடையீடுகள் உயிர்த்தொகையின் எதிர்காலத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக விசுவரூபம் எடுத்துள்ளது.

வரலாறு எழுதப்பட்ட காலம் தொடங்கி, மனிதன் இயற்கையைத் தன்னை மையமிட்டே பதிந்து வந்துள்ளான். சிந்திக்கத் தெரிந்த ஒரே இனம் என்கிற அளவில் தன்னை மேட்டிமை நிலையில் அமர்த்திக்கொண்டு, காலத்தையும் திணைவெளிகளையும் தன் முற்றான கட்டுப்பாட்டில் கொணர்ந்துவிட்டதாய்ப் பாவித்தான். இயற்கையின் மீது ஏகபோக அதிகாரம் செலுத்த முயன்றான். இயற்கையின் உறவினர்களில் ஒன்றாகத் தன்னைக் கருதாமல் இயற்கையின்மீது முற்றுரிமை கோரத் தொடங்கினான். அவ்வாறான உரிமையை எல்லை, நாடு, அரசு, போர் என்பதாக நிறுவ முயன்றான், முயன்று கொண்டிருக்கிறான். தனிநபர் உரிமைக்கும் தலைமுறைத் தேவைக்கும் மிகையாக இயற்கை வளங்களைக் கைவசமாக்கி நுகர்ந்து கொண்டிருக்கிறான். மண்ணின் குடிகளிடமிருந்து இயற்கையின் போக்குகளைக் கற்றுக்கொள்ளும் எளிமை நாகரிக மனிதனுக்கு கைகூடாமல் போயிற்று.

நைஜீரியப் பழங்குடித் தலைவன் ஒருவன் சொல்கிறான், "எங்கள் கொற்றவையின் குரலால் வழிநடத்தப் படுகிறோம்" (சினுவ ஆச்சிபி: சிதைவுகள்). "எங்கள் வனத்துக்குள் எல்லைக்கோடு கிழிக்க உனக்கு அதிகாரம் தந்தவன் யார்?" எனக் கேட்கிறாள் போர்னியோ வனப்பழங்குடியின் மூதாட்டி (நக்கீரன்: காடோடி).

சூழலியல் இறையியல்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘சமய உலகப் பார்வைக்கும் சுற்றுச்சூழல் சிதைவிற்கும் நேரடி உறவு உள்ளது’ (https://en.wikipedia.org/wiki/Ecotheology) எனும் புரிதலின் பின்னணியில் மேலைநாடுகளில் 'சூழலியல் ஆன்மிகம்' (ecospirituality)/ 'சூழலியல் இறையியல்' (ecotheology) கருதுகோள் அறிமுகமானது. இக்கருதுகோள் இயற்கையைக் கடவுளின் சாயலாய்   முன்னிறுத்தி, சகவுயிர்களின் மீதான தோழமையைக் கோருவது. சூழலியல் சிக்கல்களைக் கையாளும் வலிமை அறிவியல், கல்வி, அரசியல் கட்டுமானங்களுக்கு இல்லை எனவும் ஆன்மிக/ சமயக் கருத்தியல்களின் துணையால் மட்டுமே அவற்றைத் தீர்க்கமாய்க் கையாள முடியும் என்றும் இதன் ஆதரவாளர்கள் எண்ணுகின்றனர் (பிரவுன், 2012).  இராமலிங்க வள்ளலாரின் 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்னும் கூற்று இக்கருதுகோளுக்கு நிகரானது. இந்தியச் சூழலில் பரவலாகியிருந்த இயற்கைக் கோயில்களை (sacred groves) சூழலியல் இறையியலின் செயல்வடிவமாய்க் கொள்ளலாம்.

பல்லுயிரியமும் மரபணு வரைபடமும்
  
அறிவியல் பார்வையில், பல்லுயிர்ச்சூழல் வழங்கும் சேவைகள் எண்ணற்றவை. முக்கியமாக, பல்லுயிர்ச் சூழலில் சூழலியல் கட்டமைவின் அனைத்து உற்பத்தியும் வீணடிக்கப்படாமல் பயன்படுத்திக் கொள்ளப் படுகின்றன; உணவுச்சங்கிலி வலுவாகிறது; உணவு வலைப்பின்னல் விரிந்து, செறிவாகிறது; சூழலியல் சமன்பாடு பராமரிக்கப்படும். அதன் விளைவாக அச்சூழலியல் கட்டமைவு நிலைத்து நீடிக்கும் வாய்ப்பு மேம்படுகிறது. இவற்றின் உறுபயன் மனிதனுக்கும் வந்துசேர்கிறது. ஓர் இனத்தின் அழிவு என்பது அந்த இனம் பரிணாம காலத்தில் மெருகுபடுத்திப் பாதுகாத்து வந்த அரிய, தனித்துவமான மரபணுச் சேகரத்தின் நிரந்தரமான அழிவு ஆகும். உயிரினங்களுக்கிடையே நிலவிவந்த உறவு ஊடாட்டங்கள் (போட்டி, மோதல், ஒட்டுண்ணி, வேட்டை பரஸ்பர  சார்புநிலை) ஊனமாகிவிடும்.

வாழிடச் சிதைவுகளின் காரணமாக உலகெங்கும் பல்லாயிரம் உயிரினவகைகள் அழிந்து கொண்டிருக்கின்றன; நூற்றுக்கணக்கான அரியவகை இனங்கள் (சிவப்புப் பட்டியலில்) அழிவை எதிர்நோக்கி நிற்கின்றன. உயிரினம் ஒவ்வொன்றும் சூழலியல் கட்டமைவில் கண்ணி; அதனழிவு இயற்கையின் இயல்பான இயக்கத்தை ஊடறுப்பதாய் அமையும். கடலில் மிதவைத் தாவரங்கள் (phytoplankton) அழிந்துபோனால் மீன்வளம் அற்றுவிடும்; பாம்புகள் இல்லாமற்போனால் தவளை, எலி இனங்களின் தொகை பெருகி நிலச் சூழலமைவு சமன் குலைந்துவிடும். இயற்கையின் உணவு வலைப்பின்னலில் ஒவ்வோர் இனத்துக்கும் பதிலியற்ற இடம் உள்ளது. குறிப்பிட்ட சூழலியல் கட்டமைவில் ஓர் இனம் நிகழ்த்தும் பரிவர்த்தனைகளை சூழலியல் சுவடு (ecological foot print) என்று அழைக்கின்றனர். வனம் என்பது நெடிதுயர்ந்த மரங்களும் புலிகளும் மட்டுமன்று; செடி-கொடிகள், புழுக்கள், தேரை, காட்டு அணில், இருவாயன் உள்ளிட்ட பல்லாயிரம் இனங்களின் தொகுப்பு. புல்வெளி, வனம், குளம், அலையாத்தி, கழி, கடல் என்பதான சூழலியல் கட்டமைவு ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வகையான உயிரினங்களின் உயிர்ச்சூழல். 'மனித மையப் பார்வை' (Anthropocentrism) இந்நுட்பமான உறவினைப் புறக்கணிக்கிறது.

உயிரின் செயல் திட்டம் அதன் மரபணுத்தொகுப்பில் அடங்கியுள்ளது. கருநிலை தொடங்கி இறப்பு வரையில் ஓர் உயிரி நிகழ்த்தவேண்டிய பணிகளுக்கான ஒட்டுமொத்தத் தரவும் மரபணுக்களில் பத்திரப்படுத்தப் பட்டுள்ளன. இம்மரபணு வரைபடம் (genetic map) பரிணாம காலத்தில் அவ்வுயிரினம் கடந்துவந்த நிலைகள் குறித்த தரவுகளின் கருவூலமாகவும் உள்ளது. மரபணுத்தொகை பரிணாமவியலாளர்களுக்கு இயற்கையின் காலப்பெட்டகமாய்ப் (nature’s time capsule) பயன்படுகிறது. ஹோமோ சபியன்ஸ் சபியன்ஸ் (Homo  sapiens sapiens) என்றழைக்கப்படும் நவீன கால மனிதனின் மரபணுத் தொகையில் அவனது வாழ்நாளில் தேவையுறும் 80000  மரபணுக்கள் ஒழிய உபரியாய் 40000 உள்ளன. இவ்விரண்டு வகை மரபணுக்களும் கடந்த காலத்தின் ஆவணங்கள் ஆகும். கறவையினங்கள் செவியை அசைக்க உதவும் தசைகள், குரங்கின் வால், தவளையின் மூன்றாம் இமை, அசைபோடும் பசுந்தாவர உண்ணிகளின் நீண்ட குடல் - இவற்றின் எச்சங்களை மனிதன் இன்றும் சுமந்து கொண்டிருக்கிறான். இவை போன்று ஏனைய முதுகுநாண் விலங்கினங்களிலும் ஏராளம் பண்பு எச்சங்களைக் காணலாம். 'ஒவ்வொரு கருவும் அதனதன் வளர்ச்சி நிலைகளில் அதன் இனத்தின் பரிணாம வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கிறது' (Ontogeny repeats Phylogeny) என்பார் எர்னஸ்ட் ஹேக்கல். மரபணு நினைவு (genetic memory) என்பது பரிணாம நினைவுகளின் (phylogenetic memory) பிரதியே.

நடத்தை வரைபடம்


மானுடவியல் போல, விலங்குகளின் செயல்முறைகளைக் கூர்ந்து பதிவிடும் புலத்தை நடத்தையியல் (Ethology) என்கிறார்கள். இரை தேடல், இனப்பெருக்கம், குஞ்சுகளை பேணுதல், வாழிட எல்லைகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட எல்லாப் பண்புகளிலும் பரிணாம வரலாற்றின் தாக்கத்தைக் காண முடியும். மரபணு வரைபடம் போலவே விலங்கினங்களின் நடத்தை வரைபடமும் (behavioural map) காலத்தையும் திணைவெளியையும்  பிரதியெடுத்துள்ளதை அறிந்துகொள்ளலாம். மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் நெருப்புப் பறவையின் கால்கள், நீந்துவதற்கேதுவாக வாத்தின் கால்விரல்களில் அமைந்துள்ள சவ்வுகள், உடலை வெதுவெதுப்பாக்கிக்கொள்ளும் பொருட்டு சூரிய வெப்பத்தை ஈர்க்கும் இகுவானா, ஸ்பீனொடாண் போன்ற பாலைவனப் பல்லிகளின் முதுகுத்தோல்- இவையனைத்தும் கடந்த கால நடத்தைகளின் பிரதியாக்கமே.

நினைவு என்னும் காலப்புதிர்

உலகக் கடல்களில் காணக்கிடைக்கும் அற்புதமான உயிரினங்களின் பட்டியலில் பவளப் புற்றுகளுக்கு முக்கியமான இடம் உண்டு. மன்னார்க் குடாப் பகுதியில் மட்டும்  103 இனங்கள் இருந்தன. இந்த நிடேரியா (Cnidaria) வகைக் குழியுடலிகள் வாழும் காலத்தில் தம் உடலைச் சுற்றிச் சுரந்து உருவாக்கும் சுண்ணாம்புக்கூடுதான் பவளப்புற்று. மனித மூளை, தேன்கூடு, விரல், குச்சி போன்ற தனித்துவமான வடிவங்களில் ஒவ்வொரு இனமும் புற்றுக் கட்டும்.  தூக்கணாங்குருவிக் கூட்டின் கட்டுமானக் கலையை வியக்காமல் இருக்க முடியாது. மலைத்தேனீக்கள் அரைநிலா வடிவத்தில்  பிரம்மாண்டமான கூடு கட்டும். கூட்டில், அறுங்கோணவடிவ செல்களில் ஆண், பெண், குஞ்சு, இராணித் தேனீக்களுக்கு தரமான அளவுண்டு. கறையான் இனங்கள் நிலத்தடியில் தொடங்கி மூன்றாள் உயரத்துக்கு, இரண்டு மூன்று டன் எடையில் மலை போன்று கட்டும் கூட்டுக்குத் திட்டமான வடிவநேர்த்தி உண்டு. எத்தனை முறை தரைமட்டமாக்கினாலும் அதே வடிவநுட்பத்துடன், அதே அளவில் இரண்டே மாதங்களில் மீளக்கட்டிவிடும். ஆச்சரியம் என்னவென்றால், வேலைக்காரக் கறையான்கள் ஆயுள் அறுபதே நாட்கள்தான்; இராணியும் புற்றும் பத்து ஆண்டுகள் வரை நீடிக்கும். தேனீக்களும் கறையான்களும் பெருங்குழுவாக, குடும்ப அமைப்பாக வாழ்வன. கூட்டின் கட்டிடக்கலை என்பது அவற்றின் குழு அனுபவத்தின் தொகுப்பு நினைவுகள் ஆகும்.

ஒரு குறிப்பிட்ட வலசைப் பறவை சில ஆயிரம் கிலோமீட்டர்கள் பெருங்கடல்களைக் கடந்து போகிறது. களைப்புற்றுப் போனால் கடற்பரப்பில் உட்கார்ந்துகொள்வதற்கென தனது எடையைத் தாங்கி மிதக்க ஏதுவான ஒரு குச்சியை அலகில் சுமந்து செல்கிறது. சில சைபீரியக் கொக்கு இனங்கள் ஆண்டுதோறும் 12000 கிலோமீட்டர் தொலைவு பறந்து தென்னிந்திய நீர்ப்பரப்புகளுக்கு வருகை தருகின்றன. சால்மன் கெண்டைகள் கடலிலிருந்து கழிமுகத்துவாரம் வழி ஆற்றுக்குள் நுழைந்து நதிமூலம் தேடி சிலநூறு கிலோமீட்டர்கள் பயணித்து இனப்பெருக்கம் செய்கின்றன.  முன்னனுபவம் ஏதுமின்றி, ஆண்டுதோறும் அதே இலக்கை அடையும்படி சால்மன் கெண்டையை வழிநடத்தும் தூண்டல் எது? பறவைகளும் மீன்களும் எப்படி குறிப்பிட்ட காலங்களில் நெடுந்தொலைவு வலசை மேற்கொள்ளுகின்றன? பறவைகள் எப்படிக் குறிப்பிட்ட காலத்தில் கூடுகட்ட நேர்கிறது?

 மரபணுவின் அமைப்பியலை இனம்காட்டிய இணையரில் ஒருவரான பிரான்சிஸ் க்ரிக் இதற்கு ஓர் அருமையான விளக்கத்தை முன்வைக்கிறார்:

"நம் நினைவுகள், கனவுகள், உணர்வுகள், இலட்சியத் தேடல்கள், அடையாள உணர்வு, சுதந்திர சிந்தனை (free will) அனைத்தும் நம் நரம்புகளின், அவற்றோடு இணைந்திருக்கும் செல்களின் தொகை."

இங்கு நரம்பு என்னும் சொல்லை நினைவடுக்குகளின், மரபறிவின் குறியீடாக வாசிக்கவேண்டும்.

விலங்குகளைப் பின்தொடர்தல்

இயற்கையை அவதானிக்கும் மனிதனின் இயல்பு விலங்குகளின்பாற்பட்டது. உணவு, பிற சேவைகளை முன்னிட்டு விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் மனிதன் என்றென்றும் கடமைப்பட்டுள்ளான். இன்று நம் தொழில்நுட்பச்சாதனைகளாக பெருமை கொள்ளும் பல கண்டுபிடிப்புகளின் 'காப்புரிமையாளர்கள்' விலங்குகளே. சான்றாக, ஜெட் விசை தொழில்நுட்பம் கணவாய்மீனின் கருணை; விமானம் பறவைகளின் கொடை; ஒலிவருடல் தொழில்நுட்பம் (ecosounding/ SONAR) வவ்வால், திமிங்கிலம் முதலான பாலூட்டிகளின் அன்பளிப்பு. ஆதி மனிதன் பயிர் உணவிலிருந்து விலங்குணவுக்கு நகர்ந்தபோது வேட்டைத் தொழில் தொடங்கியது. இயற்கைச் சூழலில் தன்னைத் தற்காத்துக்கொண்டு விலங்குகளை வேட்டையாடக் கருவிகளை நாடலானான். தாரைவாழ் விலங்குகளின் பற்றாக்குறை காரணமாகவோ, நீர்நிலைகளில் விலங்கு வேட்டைக்கான மிகுதியான வாய்ப்பு காரணமாகவோ இருந்தமை தெப்பம் கட்டி ஆறுகளில் நுழைந்தான். அங்கிருந்து  மனிதன் தற்செயலாகக் கடலுக்குள் நுழைந்திருக்கவேண்டும். கப்பல், கடல் தாண்டிய வணிகம் என்பதெல்லாம் மனிதன் விலங்குகளை பின்தொடர்ந்ததன் ஈவு.

இனக்குழு மரபறிவு

உயிரின் இலக்கினை உயிரியலாளர் எட்வர்ட் பாரிங்டன் (Edward Barrington) இவ்வாறு வரையறுக்கிறார்: 'தம் இனத்தைப் பெருக்கும் வரை உயிர் மீந்திருப்பது'. ஜூலியன் ஹக்ஸ்லி (Julian Huxley) என்னும் பரிணாமக் கோட்பாட்டாளர் உயிரினத்தைத் 'தகவுகளின் சிப்பம்' என வரையறுக்கிறார். தகவு என்பது குறிப்பிட்ட சூழலுக்கு இசைவாக இயங்குவது. உயிரினங்கள் அவ்வாறு இயங்கிடவேண்டுமாயின் சூழலை அவதானித்தாக வேண்டும். மனித இனக்குழுக்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சூழலை, அது சார்ந்த வாழ்வை அனுபவ அறிவாத்க தன் தொகுப்பு நினைவில் சேகரம் செய்துள்ளது. இதனை இனக்குழு மரபறிவு என்கிறோம்.

மண்ணின் பண்பு, நீர் பெறுமதி, நீரியல் சுழற்சி, பருவநிலைச் சுழல்நிகழ்வுகள், பயிர்களின் தன்மை, விலங்குக் கணங்களின் வாழ்க்கை- இவை எல்லாவற்றையும்  குறித்த பாரம்பரிய அறிவு. குறிப்பிட்ட நிலப்பகுதியில் குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட பயிர்கள் சிறப்பான அவ்விளைச்சலைத் தருவது சூழலுடனான அப்பயிரின் ஒத்திசைவு ஆகும். அவ்விளைச்சலைச் சார்ந்து அந்நிலத்தில் வாழும் விலங்குகளும் மனிதர்களும் அதே ஒத்திசைவை வெளிப்படுத்துகின்றன. நிலம், நீர், காற்று, பயிர்களும் பிறவுயிர்களும் இசைந்து வாழும் சூழலில் ஒவ்வொரு இனமும் தனதான மரபுகளைக் உருவாக்கிக்கொள்கின்றன. உயிரினங்களின் மரபு இயற்கையின் போக்குகளை அடியொற்றி அமைவது.
II
மனிதன் மாசற்ற கண்களால் உலகை நோக்குவதில்லை; அவன் பார்வை குறிப்பிட்ட வழமைகள், நிறுவனங்கள், சிந்தனைப் போக்குகளால் தணிக்கைக்கு  உள்ளாகியுள்ளன.
 - மானுடவியலாளர் ரூத் பெனடிக்ட் (1887-1947).


திணைநிலத்தை அவதானித்தல்

இயற்கையின் பருப்பொருட்களில் ஒன்றான நிலம், அனைத்துயிர்களின் வாழிடமாகவும் மனித வாழ்வாதாரத்தின் அடிப்படைக் கூறாகவும் அமைவது. திணைநிலம் குறித்த முன்னோர்களின் பார்வை இயற்கை குறித்த அவர்களின் புரிதலின் முதன்மைக் கூறாகும். தமிழர் வாழ்வு குறித்த மிகப்பழமையான பதிவுகளாய் சங்க இலக்கியம் அமைந்துபடுவது. சங்க இலக்கியப் பதிவுகளில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய எட்டுத்தொகை நூல்களிலும், பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை ஆகிய பத்துப்பாட்டிலும் நெய்தல் நிலம் குறித்த விரிவான செய்திகள் கிடைக்கப் பெறுகின்றன. கடல் வெளியையும் கடலொட்டிய நிலத்தையும் கடலர்கள் எவ்வாறு அணுகினர், நெய்தல் நிலம் அவர்களின் வாழ்வில் பெற்றிருந்த முக்கியத்துவம் இரண்டையும் பதினான்குக்கும் மேற்பட்ட கவிஞர்கள் நுணுகி விவரித்துள்ளனர். அவர்களில் நெய்தல் நிலம் சார்ந்த கவிஞர்கள், குறிப்பாக மாமூலனார், உலோச்சனார் அம்மூவனார் என்னும் மூவர் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளனர்.

தொல்காப்பியம் நெய்தல் நிலத்தை 'வருணன் மேய பெருமணல் உலகம்' என்கின்றது; தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர், இதற்குக் 'கருங்கடர்க் கடவுள் காதலித்த நெடுங்கோட் டெக்கர்' எனப் பொருள் கூறினார். வருணனைத் தங்கள் தெய்வமாக வழிபடும் மக்கள் வாழ்கின்ற, கடல் கொழித்த மணல்மேடுகள் மல்கிய கடற்கரைப் பகுதி என்று இதற்குப் பொருள்.

நீல நெடுங்கடலின் வெண்ணுரைப் பிசிர் சிதறுமலைகள் மோதிக் குவித்த மணல்மேடுகள் மலிந்த கரையே நெய்தல் நிலப் பகுதி என்கிறது அகநானூறு (250: 1,2,4); இவ்வெண் மணற்கரை, அடைகரை  (நற்றிணை 11:6; குறுந்தொகை 316:4; அகநானூறு 10:11), எக்கர்  (நற்றிணை 15:1; குறுந்தொகை 53:5; அகநானூறு 10:9),  புலம்பு  (நற்றிணை 114:11; குறுந்தொகை 5:4; அகநானூறு 10:4) , பரப்பு  (குறுந்தொகை 316:4; அகநானூறு 130:8) , சேர்ப்பு  (நற்றிணை 354:7; குறுந்தொகை 316:4; கலித்தொகை 136:4)  என்று வழங்கப்படுகிறது. கடற்கரைப்பகுதி மிக மென்மையான நிலமாக இலக்கியத்தில் குறிக்கப்படுகிறது. இளமணல் எக்கர் (அகநானூறு 250:4), நுண்மணல் அடைகரை (ஐங்குறுநூறு 115:2), பூமணல் அடைகரை (நற்றிணை 11:6), மெல்லம்புலம்பு (நற்றிணை 195:4) என்பதாக கடற்கரையின் மென்மைத்தன்மை சுட்டப் பெறுகிறது.

'பொங்கியெழும் திரை மோதியதால் திரண்ட வெண்மணல் அடைகரை' (நற்றிணை 35:1),  ‘இவ்வறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோடு’ (ஐங்குறுநூறு 177:2), ‘கடுவெளி தொகுத்த  நெடுவெண் குப்பை' (அகநானூறு 372:2-3) என கடற்கரையில் மணல்வெளிகள்/ மணல்மேடுகள் பலவாறு உருவாகும் தன்மைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை  போன்ற  நுட்பமான  விவரிப்புகள், கடல், கடற்கரை குறித்த கடலர்களின் மரபான அறிவைப் புலப்படுத்துகின்றன.

நெய்தல் நில மக்கள் கடலை அடுத்த வெண்மணல் திடரில் சிறு சிறு குடில்களை அமைத்துக்கொண்டு வாழ்வர். குடிசைகள் காய்ந்த புல்லாலும் ஓலைகளாலும் வேயப்பட்டு, குறுகிய இறப்புகளைக் கொண்டிருந்தன (நற்றிணை 207:1-2).   கூட்டமாகக் காணப்படும் அக்குடில்களுக்கு இடையேயும், சுற்றிலும் ஓங்கியுயர்ந்த பனைமரங்கள் நிறைந்திருக்கும் (நற்றிணை 38:8-10); குடியிருப்பினைச் சூழ்ந்து அடர்ந்த தாழைப் புதர்கள் நிறைந்து வேலியமைந்ததைப்போல் காணப்படும் (குறுந்தொகை 245:3-4). அருகில் காணப்பெறும் வளைந்த கருங்கழிகளில் (ஐங்குறுநூறு 183:5) நெய்தல் கொடிகள் மலிந்து பூத்துப் பொலியும். அடும்புக்கொடிகள் எங்கும் படர்ந்து பரவி இருக்கும் (குறுந்தொகை 248:4-6); முற்றங்களில் புன்னையும் புலிநகக் கொன்றையும் பூத்துக் குலுங்கும் (நற்றிணை 219:6).

சமவெளி மனிதர்களை பொறுத்தவரை கடல் ஒரு பெருநீர்ப்பரப்பு. கடலோடியின் கடல் என்பது அதன் அடித்தரை. சமதளம், பள்ளத்தாக்கு, பாதாளம், மேடுகள், சேற்றுநிலம், பாறைகள் மணற்பரப்பு என்பதான பன்மைத்தன்மை கொண்டது கடலடி நிலம். மரபான இப்பதிவுகள், பழங்குடிச் சமூகத்தின் நினைவு அடுக்குகளில் பத்திரப்படுத்தப் பட்டுள்ளன. கடற்பரப்பின் நிறங்கள், உயவுகள் (கடலின் மேற்பரப்பின் நகர்வுகள்), நீரோட்டங்களின் போக்குகளை முன்வைத்துப் பருவகாலம் சார்ந்த மீன்களின் வரவை அவன் கணிக்கிறான், மீன்களை அடையாளம்  காண்கிறான். ஒரு கடல் பழங்குடி வேட்டைக்களத்தில் தன் முழு உடலையும் புலன்களாக்கிக் கொள்கிறான். கடலை பொழுதுகளின், காட்சிகளின், ஒலிகளின், வாசனைகளின் வரைபடமாய் தன் நினைவில் பதிந்து வைத்திருக்கிறான் (வறீதையா கான்ஸ்தந்தின், 2017).

வனம் போலல்லாது, கடல் சலித்துக்கொண்டேயிருப்பது, கணிப்பிற்கு அடங்காதது. வாழ்வாதாரத்தின் பொருட்டு அதன் போக்குகளை ஒரு கடல் பழங்குடி அவதானித்துக்கொண்டே இருக்கவேண்டும். இறுதி மூச்சு வரை கடலின் மாணவராய் இருக்கவேண்டும். களத்தில் தன்னைத் தற்காத்துக்கொண்டு, சிறந்த வேட்டைப் பெறுமதிகளுடன் அவன் கரைதிரும்பியாக வேண்டும். கரையில் தன் வரவுக்காகக் காத்திருக்கும் குடும்பத்தின் அன்றாடப் பசி போக்க அப்பேருழைப்பு இன்றியமையாதது. விலங்குகளும் இவ்வாறே இயற்கையைத் தம் அனுபவத்தில் பதிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் நோக்குதல்

மீன் உண்ணும் சமவெளி மக்களிடையே மீன்களைப் பொதுப்பெயரால் அழைக்கும் வழக்கம் வந்துவிட்டது. சொறா, எறா, நெத்திலி, பாரை, சீலா, வஞ்சிரம் என மீன் பெயர்கள் ஐந்தாறாகச் சுருங்கிவிட்டன. கடியப்பட்டினம் கிராமத்தில் ஒரு மீனவர் ஒரே மூச்சில் 313 மீன்களின் பெயரை அடுக்கிக்கொண்டே போனார் (வறீதையா கான்ஸ்தந்தின், 2007). என் கிராமத்தில் சிறுவயதில் நாங்கள் விளையாடும் ஆட்டங்களில் ஓன்று மீன் பெயர் சொல்லுதல். மணல்வெளியில் வட்டமாய் உட்கார்ந்து கொள்வோம். அதிகப்படியான மீன்பெயர் சொல்பவர் வெற்றி பெற்றவராவார். மீனவச் சிறுவர்களின் கடலார்வம் இப்படியெல்லாம்தான் வளர்த்தெடுக்கப்பட்டது. கடல் நோக்குதல், கடல் பழகுதல் நெய்தல் வாழ்வின் கூறுகளாகச் சங்க இலக்கியத்தில் இடம்பெறுகிறது.
கணக்கெண்ணிக் களித்தல் இன்னொரு பொழுது போக்காகச் சங்க இலக்கியத்தில்   சுட்டப் பெறுகிறது (முத்து. கண்ணப்பன், 1978). மீன்களை உலர்த்தும் பரதவப் பெண்கள் உப்புக் குன்றின் மீது ஏறி நின்று, கடலில் கரை நோக்கிவரும் படகுகளைச் சுட்டி, இது எந்தைத் திமில், அது நுந்தைத் திமில் என்றெண்ணி விளையாடுகின்றனர் (நற்றிணை 331:1-8); இரவில் தம் வீடுகளில் இருந்தவாறு பரதவ மகளிர் கடலில் மீன் பிடிக்கும் திமில்களில் எரியும் விளக்குகளை எண்ணுவர் (நற்றிணை 372:10-13); முன்னிரவில் கடலில் சென்று மீன்பிடிக்கும் பரதவர்கள் கரையில் பட்டினத்தில் நீண்ட நெடு மாடங்களின் ஒளிவிளக்குகளை எண்ணுவர் (பட்டினப்பாலை 111-112).


ஒளிரும் கடல்

என் சிறு வயதில் இரவில் கடலுக்குள் போகும் அப்பாவுக்குக் குற்றேவல் புரிந்த அனுபவம் உண்டு. ஆண்டின் குறிப்பிட்ட பருவங்களில் பின்னிரவுப் பொழுதில் ‘ஆர்ச்ச வளைப்பு’ என்னும் மேல்கடலில் விரிக்கும் வலையுடன் அப்பா கடலுக்குப் புறப்படுவார். அப்போதெல்லாம் கடல்புகும் காலத்தைத் தீர்மானிப்பது பொழுதுகள் என்பதைவிட, ‘கவர் எழுப்பம்’, ‘கவர் அடக்கம்’ என்கிற கடல் ஒளிர்ந்து தணியும் காலம் என்பதே சரி. நிலா வெளிச்சம் துப்புரவாக இல்லாதிருக்கும் முன்னிரவுப் பொழுதில் கரைக்கடல் பரப்பு முழுவதிலும் வெள்ளி உருகி வழிவது போல ஒளிர்ந்து கொண்டிருக்கும் கண்கொள்ளாக் காட்சி கவர் எழுப்பம்.

பருவம் தோறும் மீன் கூட்டங்கள் கரைக்கு வருவதன் முன்னறிவிப்பாக ‘தேத்து’ என்னும் கடல் நிற மாற்றம் வருகிறது. தேத்து காலத்தின் பின்னிரவில் கவர் ஒளிர்ந்து தணிந்த பிறகுதான் வலையில் மீன் பிடிபடும். கவர் வெளிச்சத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் வலைக் கண்ணிகளிலும் ஒட்டிக் கொள்ளுகின்றன. வலை முழுவதும் நியான் ஒளிக்கோடுகள் போல நீலப்பச்சை நிறத்தில் ஒளிரும்போது மீன்கள் வலையை அடையாளம் கண்டு தப்பித்துக் கொள்ளும். கவர் வெளிச்சம் அடங்கிய பிறகுதான் வலைகளில் மீன்பாடு!

நெய்தல் விலங்குகள்

சங்கப் பாடல்களில் நெய்தல் திணை விலங்குகளும் அவற்றின் நடத்தைப் போக்குகளும் விவரிக்கப் பெறுகின்றன. கடலிலும், கடல் தொட்டமைந்த கழிகளிலும், கரையிலும் வாழும் இவ்விலங்குகளின் தோற்றம், வடிவமைப்பு, சூழல், வாழ்க்கைமுறை ஆகியவை பெரும்பான்மையும்  பயன்பாட்டின் பார்வையில் பதியப்பெற்றுள்ளதைக் கவனம் கொள்ளவேண்டும்.

சுறா: பிற கடல் விலங்குகளையும் மனிதனையும் வேட்டையாடும் மீன் இனம் சுறா. பால் சுறா, முண்டன்சுறா, கொப்புளிச்சுறா, புலிச்சுறா, கொம்பன் சுறா, கூரச்சுறா, வாள்சுறா என்பதான பல சுறா இனங்களை மீனவர்கள் அறிந்திருந்தனர். சில இனங்கள் 30 அடி நீளம் வரை வளரும். கடல் நீரில் மட்டுமே காணப்படும் சுறா அரிதாக கடலொட்டிய கழிகளிலும் காணக்கிடைக்கும். ஏறு, பெருமீன் எனப் பல பெயர்களில் வழங்கப்படும் சுறா மீனின் பண்புகள், பரதவரின் சுறா வேட்டை, சுறாமீன் உணக்கல், சுறா எண்ணெய் குறித்து ஏராளம் குறிப்புகள் இலக்கியத்தில் உள்ளன.

'சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்' (நற்றிணை 223:7),

'கடுஞ்சுறா  எறிந்த  கொடுந்தாட்தந்தை'  (நற்றிணை 392:1),

'கோட்சுறா  கிழித்த கொடுமுடி நெடுவலை' (அகம் 343:21).

இறா: சமைத்தும், உணங்கலாகவும் விரும்பி உண்ணப்பட்ட இறா என்னும் இறால் மீன்குறித்து சங்கப் பாடல்களில் ஏராளம் குறிப்புகள் உள்ளன. கணுக்காலி இனத்தைச் சேர்ந்த இறாவின்  தலையில் துய் போன்ற அமைப்பும் தடித்த தோள்வளைய மடிப்புடன் வளைந்த உடலமைப்பையும் 'முற்றாத மஞ்சள்  கிழங்கின் புறத்தைப் போல'  என்பதாக விவரிக்கிறது ஒரு பாடல்;

'முற்றா மஞ்சட் பசும்புறக் கடுப்பாகி
சுற்றிய பிணர சூழ்கழி இறவின்'  
                                      (நற்றிணை 101:1-2)

பூட்டிய நாணற்ற வில் தெறிப்பதுபோல் துள்ளியெழுந்து செருக்கித் திரியும் இறா (அகநானூறு 96:1-2), நாணில் தொடுத்த வில்லினை ஏய்க்கும் வளைந்த இறா (திணைமாலை நூற்றைம்பது 131:2-4), கடலின் கரைக்கருகே அலைகள் திரட்டிக்கொண்டு வரும் இறால் கூட்டம்  (குறுந்தொகை 109:1-2). கடலிலும் கழிகளிலும் வாழும் இறாக்கள் (சூழ்கழி இறவின் கணம்- நற்றிணை 101:2) என்பதாக இறாவின் சிறப்புப் பண்புகள் சுட்டப்படுகின்றன (முத்து. கண்ணப்பன், 1978).

மீன்கள்

பதினெட்டாம் நூற்றாண்டின் பெயரறியாப் புலவன் ஒருவன் பாடிய செண்பகராமன் பள்ளுவில் (பாடல் 56) ஒரு நெய்தல் நிலக் காட்சியில் மழைக்காலத்தில் கரை புரண்டோடும் பறளியாற்றில் அடித்துவரப்படும் மீன்களின் விவரணை இவ்வாறு விரிகிறது (மரியாஜான் காலிங்கராயன்,1974):

‘வாளை தேளி உளுவை குறவை/ மசறி   கயலி திமிங்கலம்/ மத்தி பொத்தி அசலை கொளுவை/ மணலை அயிலை வரிவரால்/ சாளை சூடை உல்லங்  கெளிறு/ சம்பான் நொறுக்கி வெங்கணை/ சள்ளை ஆரல் திரச்சி கூறவு/   சரமீன் காரல் நெத்தலி/ கோளை பயிந்தி நெய்மீன் கணவாய் / குறுமீன் மலங்கு பஞ்சலை/ கூனி தொழுத்தை கெண்டை கீளி/ குத்தாய் குதிப்பு வாவல்மீன்/ ஆழப்பாயும் கடலின் மீனும்/ ஆற்று மீனும் கூட்டமாய்/ அதிரப் பறளி ஆறு வார/ அதிசயம் பாரும் பள்ளீரே.’

செய்யும் தொழில், அன்றாடம் புழங்கும் பண்டங்களின் பண்புகளை மனிதர்கள்மீது ஏற்றிச்சொல்வது அனைத்துத் திணைநிலங்களிலும் பழக்கமாய் உள்ளன. நெய்தல் இனக்குழு சமூகங்களிடையேயும் அவ்வாறான பெயர்கள் நிலவுகின்றன (வறீதையா கான்ஸ்தந்தின், 2018) (பார்க்க: பின்னிணைப்பு 2).

இவை ஒழிய கடல், கழிகளில் நீந்தியும், தரையில் புதைந்தும், அலைவாய்க்கரையில்  வளை தோண்டியும் வாழும் பல்வகை நண்டுகள், சங்குகள், இப்பிகள் (சிப்பிகள்),  தாலி முதலான பல விலங்குகளும் நுட்பமாக விவரிக்கப்படுகின்றன.

மீன் பெயரிடுதல்

மீன்களை வகைப்படுத்திப் பெயரிடும் முறை மீனின் நிறம், அளவு, வடிவம், தனித்த பண்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் அமைந்த பெயர்கள் வாய்மொழிக் கதைகளையும் தோற்றுவித்துள்ளன (தனஞ்செயன், 2012) (பார்க்க:  பின்னிணைப்பு1) (வறீதையா கான்ஸ்தந்தின், 2018).

மீன்களின் நாட்காட்டி

மனிதர்கள் உணவாகக் கொள்ளத்தகுந்த ஆயிரமாயிரம் வகையான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. திமிங்கிலம், ஓங்கில், ஆவுளியா போன்ற பாலூட்டிகள்; ஆமைகள் பாம்புகள் போன்ற ஊர்வன; நண்டு, இறால் போன்ற கணுக்காலிகள்; கணவாய், சங்கு, முத்துச்சிப்பி உள்ளிட்ட மெல்லுடலிகள்; கடல் வெள்ளரி போன்ற முட்தோலிகள். இவை ஒழிய நட்சத்திர மீன்கள், கடல் விசிறிகள், ஜெல்லி மீன்கள், மிதவை உயிரிகள், பவளப்புற்றுகள் முதலிய ஆயிரக்கணக்கான உயிரினங்களும் கடலில் வாழ்கின்றன. சில உயிரினங்கள் சூழலியல் சுட்டிகள் (ecological indicators). பவளப்புற்றுகள், கடற்சங்குகள், முத்துச்சிப்பி முதலான கடல் மட்டிகள் ஓரிடத்தில் காணப்படுவது அவ்விடத்தின் மாசற்ற, மிதவெப்ப நிலையைக் காட்டுவதாகும்.

கரைக்கடல் மீன்வளத்தின் காலம் தவறாமைக்குப் பருவ மழையும் பெருங்கடல் நீரோட்டங்களும் அடிப்படைக் காரணங்கள் ஆகும். பலவகையான மீன் கூட்டங்களைக் கரைக்கடல் நோக்கி இழுத்துவருபவை கடல் நீரோட்டங்கள். மழைக்கால நன்னீர் வரத்துதான் கடலில் உணவு உற்பத்திக்கு, மீன் இனப்பெருக்கத்துக்கு முத்தாய்ப்பு. மிதவை உயிரிகள், சிற்றுயிரிகள், புழுக்கள், மெல்லுடலிகள், நண்டுகள், மீன்குஞ்சுகள், சிறுமீன்கள் என்பதாக இச்சங்கிலித் தொடர் மீன்வளத்துக்கு இட்டுச்செல்கிறது. கடல் பழங்குடிகள் இந்த இயற்கைப் போக்குகளை அறிந்திருந்ததன் காரணமாக காலங்களை மீனவர்களால் முன்கணிக்க முடிந்தது. நீரோட்டங்களின் மாறுபாடு, கடல்பரப்பின் நிறமாற்றம், காற்றின் போக்குகளை முன்னிட்டு மீன்வரவின் காலத்தை அவர்கள் பிழையின்றிக் கணித்தனர். விலங்குகள் போல, இயற்கையை அவர்கள் பின்தொடர்ந்ததால் மட்டுமே இது சாத்தியமானது.

 மீன்கள் புறவயமாகக் கருவுறுதல் நிகழ்த்துபவை (குருத்தெலும்பு மீன்கள் இதற்கு விதிவிலக்கு). வெவ்வேறு இனங்களின் விந்துவும் முட்டையும் ஒரே காலத்தில் வெளியேற்றப்பட்டால் கலப்பினக் கருவுறுதல் போன்ற சிக்கல்கள் எழக்கூடும். பரிணாமம் இதற்கும் ஒரு தீர்வு ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சார்ந்த இனங்கள் ஒரே காலத்தில் / ஒரே இடத்தில் இனப்பெருக்கம் செய்வதில்லை (spatial/ seasonal reproductive isolation). தங்கள் குஞ்சுகள் வளர்வதற்கு உணவும் பாதுகாப்பும் கிடைக்குமிடம் தேடி சினை மீன்கள் கரைக்கடல் நெடுகப் பயணிக்கும். மீனினங்கள் பொதுவாகப் பெருந்திரள் பயணிகள். சில வேளைகளில் ஒரு ராட்சதப் பந்துபோல் திரண்டு சுற்றியவாறு ஓரிடத்தில் நீந்திக்கொண்டிருக்கும். பருவமழைக் காலங்களைத் தொடர்ந்து கழிமுகத்துவாரங்கள் அருகேயுள்ள கடற்பகுதிகளை மீன்கள் தெரிவு செய்யும். கடல் மீன்வளம் குறித்த பழங்குடி மீனவர்களின் மரபறிவு இந்தப் புரிதலின் அடிப்படையில் அமைவது.

2004 ஆழிப்பேரலைத் தாக்குதலுக்கு முன்பாகவே கடலில் மீன்வளம் வற்றிப்போய்விட்டதாகத் தமிழக மீனவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். கடந்த 40  வருடங்களுக்கு மேலாக கரைக்கடல் சலித்து எடுக்கப்பட்டுவிட்டது. மாறிவரும் இன்றைய சூழலில் மீனினங்கள் பல காணாமல் போய்விட்டன; மீன்வரத்தின் அளவும் குறைந்துபோயிற்று; எல்லாவற்றையும் விட முக்கியமாக, மீன்வருகையின் காலக்கணிப்பு இன்று சாத்தியப்படவில்லை (வறீதையா கான்ஸ்தந்தின், 2018அ). 1000 கடல் மைல்..

ஆனால் அன்றைய நாட்களில் மீன்களுக்கு நாட்காட்டி இருந்தது. ஆண்டின் மாதங்களை குறிப்பிட்ட மீன்களால் குறிக்க முடிந்தது. பண்டைய நாட்களில் கன்னியாகுமரிக் கடலில் நிகழும் பருவம் தவறாத மீன் வருகையை சார்லஸ் (57, இராமன்துறை) இவ்வாறு விவரிக்கிறார் (வறீதையா கான்ஸ்தந்தின், 2018):

“பங்குனியில் நல்லவக்கார, வெள்ளை போன்ற மீன்கள் கரைமடிப் பாடுகளில் ஏராளம் வரும். சித்திரை சிறுகுதிப்புக் காலம். அதனுடன் ‘தாந்த மீன்’ என்னும் சாளை வரவாகும். சித்திரையின் பின்பாதியில் தொடங்கி வைகாசியில் நெத்திலி, சாளை மீன் களைகட்டும். ஆனி தொடங்கிவிட்டால் சாவாளை மீனும் இறால் மீனும் தாராளமாக வரும். மடிவலைகள் (பெருவலை) சாவாளைப் பாட்டுக்குப் போகும்; ஆர்ச்சவளைப்பு (மேல்மட்டத்தில் வளைக்கும்) வலைகள் இறால் பாட்டுக்குப் போகும். ஆடி மாதம் குதிப்பு, மாவூளா வெள்ளை வாவல் இனங்களுடன் தோட்டுக்கணவாய் வரும். புரட்டாசிக்கு மீன் புரண்டாலும் புரளும், மழை புரண்டாலும் புரளும். நெத்திலி சாளை மீன்களின் மீள்வரவுக் காலம் இது. ஐப்பசியில் திரண்ட மீன் (பலவகை மீன்கள்) வரும்:பெருவலையில் வேளாமீன்பாடு; வழிவலையில் நெய்மீன்பாடு.

கார்த்திகையில் மீண்டும் நெத்திலிப்பாடு. இது காக்கை கரையுமுன் (விடியலுக்கு முன்) கரைக்கு வரும் நெத்திலி மீன். மார்கழி வந்தால் மாங்காச்சூரை (பொள்ளல் சூரை), சூடைச் சாளை (பெருவலை), நீல நெத்திலி. தை வந்தால் கருப்புக்கார, உருளுகார. தை- மாசி பொதுவாகப் பஞ்சகாலம். சாதாரண நாட்களில் நாய்கூடத் தீண்டாத காக்காக் காரைக்கும் மதிப்பு வந்துவிடும். மாசி பிறந்தால் மக்க பஞ்சம் தீரும். இம்மாதம் காக்காக் கிளாத்திக் காலம்.”

சித்திரையில் குதிப்பும் சள்ளை மீனும் ஒரு வகையான வாசனையை எழுப்பும். சாவாளை மீனுக்கு மாறுபட்ட வாசனை. கெளிறு (கெழுது – மீசை மீன்) வருகையில் மற்றொரு வாசனை. சுறா, திருக்கை உள்ளிட்ட குருத்தெலும்பு மீன்களுக்குத் தனித்துவமான வாசனை.கல்இறால், இறால் முதலிய இனங்களுக்கு ஒரு வாசனை. நெத்திலி மீனில்கூட மடிவலை, வலை நெத்திலிக்கு வேறுவேறு வாசனைகள்.

சோழமண்டலக் கடற்கரையில் (வாடா தமிழ்நாடு) நிலவும் மீன்பிடி பருவங்கள் குறித்து கோதண்டபாணி (64, கைப்பாணிக்குப்பம், விழுப்புரம்) சொல்கிறார் (வறீதையா கான்ஸ்தந்தின், 2014):

"இன்ன காலம் எறா கெடைக்கும், இன்ன காலம் மீன் கெடைக்கும்கறதெல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. வருஷத்துல இந்தப்பக்கம் அதிகமா மீன் கெடைக்கிறதுன்னா புரட்டாசி, கார்த்திகை, ஐப்பசிலாதாம். அப்பதான்  இந்த செனாகூனி, நெத்திலி மாதிரி பொடிமீன்கள்லாம் நெறிய படும். சில மீனுங்க அத்தே போச்சு. நொணலு, சுதும்பு (குதிப்பு) சுத்தமா இல்ல. ஆனா ஒன்னு-  எறா மட்டும் அப்ப வந்த மாதிரி இப்பவும் அதே மாசத்துல கெடைக்கும். புரட்டாசி- ஐப்பசி-கார்த்திகைன்னா எறாப் பாடு வந்துரும். ஐப்பசி-கார்த்திகையில் தொழிலுக்குப் போவ முடியாது. ஓட்டுத்தூத்தமாடா இருக்கும். குன்னு வாடைக்காத்தும் கடல் கொந்தளிப்புமா இருக்கும். புயலும் அடிக்கும். பத்து இருவது நாளு  கூடத் தொழிலுக்குப் போவமுடியாம இருக்கும். மாசி- பங்குனி பஞ்சகாலம். வஞ்சிரம், தேளல், பண்ணி, சுறா, சீலா மாதிரி மீனுக தூண்டில்ல கெடைக்கும். ஒரு சீசன் எறா, ஒரு சீசன் கவல..."

மீன் சுவைகளின் இனவரைவியல்

சாமந்த் சுப்ரமணியன் (2010) எழுதிய 'மீனைப் பின்தொடர்தல்' இந்தியக் கடற்கரைநெடுக பலவகையான மீனுணவுகளின் சுவையைத் தேடும் அவரது பயணப் பதிவு. மேற்கு வங்காளத்தின் ஹில்ஸா, கேரளத்தின் மத்திச்சாளை தொடங்கி ஆந்திராவின் ஆஸ்த்துமா மீன் சிகிச்சை, குஜராத்தின் தனித்துவமான படகு கட்டும் தொழில், முத்துகுளித்துறையில் வடுகர் சீவிய செவியின் கதை வரை தனது பயணநூலில் மீனவர்களின் இனவரைவியலை சுவாரஸ்யமாக எழுதிச் செல்கிறார். எனது ஆய்வுப் பயணங்களின்போது தமிழகக் கடற்கரைகளிலும்  வெராவல், கொல்லம், மங்களூர்க் கடற்கரைகளிலும் மீன் சமையல்களைச் சுவைத்திருக்கிறேன். பல்வேறு இனக்குழுக்களின் சுவைத் தெரிவுகளைப் பண்பாட்டு வரலாறுகளின் பிரதிபலிப்பாகக் காணத் தொடங்கியது இந்தப் பயணங்களின்போதுதான். இலட்சத்தீவில் சூழலியல் சுற்றுலாவின் சிறப்புகளில் ஓன்று அங்கு பரிமாறப்படும் 'மீன் வற்றிச்சது' (வற்றவைத்த மீன்). வள்ளவிளையில் 'சூரைப் பொள்ளல்' (மசாலாவுடன் சுட்ட மீன்) சுவைத்திருக்கிறேன். வேணாட்டுக்கடற்கரையில் 'உள்ளியும் மிளகும்', நாஞ்சில் நாட்டுக் கடற்கரையில் 'மஞ்சத்தண்ணி', 'நெத்திலிச்சம்பல்' முத்துக்குளித்துறையில் 'மாசிக் சாம்பல்', மணப்பாட்டில் 'மீன் பிரியாணி', பெரியதாழையில் 'பொரித்த மீன் குழம்பு'- ஒவ்வொன்றின் தனித்துவமான சுவையும் என் நாவில் தங்கிநிற்கிறது. உணவு, மனிதன் இயங்குவதற்கு ஆற்றல் தரும் எரிபொருள், உடல் வளர்ச்சிக்கான இடுபொருள் என்பதற்கு அப்பால் பகுதி சார்ந்த இனவரைவியல் கூறுகளைச் சுமந்துநிற்கும் பருப்பொருளாகவும் அமைகிறது.  இது ஒருபுறம் இருக்க, வெவ்வேறு பகுதிகளில்/ இடங்களில், வெவ்வேறு பருவகாலங்களில் பிடிபடும் ஒரே மீனினம் சுவையில் பாரதூரமான வேறுபாடுகளைக் கொண்டிருப்பதையும் அனுபவித்தது அறிந்திருக்கிறேன். வாழும் கடல்நீரின் குணக்கூறுகளையும் பருவகாலங்களின் தாக்கத்தையும் சார்ந்த வேறுபாடுகளாக இதனைப் புரிந்து கொள்ளலாம். 

இயற்கையை அவதானிக்கும் பழங்குடி

புலமைவாய்ந்த சூழலியல் பேராசிரியர் ஒருவர் பாரம்பரிய மீனவர்கள் கடலில் தூண்டில்போட்டு மீன்பிடிப்பதை நேரில் பார்க்க விரும்பினார். இராபர்ட் பனிப்பிள்ளை (2016) என்கிற கடலோர சூழலியல் ஆர்வலர் 'வெளிப்பொருத்து' இயந்திரப் படகில் அவரைக் கடலுக்கு அழைத்துப் போனார். அது, தூண்டில் மீன் பிடித்தலில் அனுபவம் மிகுந்த அலெக்ஸ் என்னும் மீனவரின் படகு. அலெக்ஸ் தூண்டில் வீசத்தொடங்குகிறார். கொஞ்ச நேரத்தில் தூண்டில் இரையை ஒரு மீன் அணுகுகிறது. அலெக்ஸ், `அது ஒரு பெரிய கலவா மீன்’ என்கிறார்.

'பிறகு ஏன் அதைத் தூக்காமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?’

ஆர்வம் தாங்காமல் பேராசிரியர் கேட்கிறார். அலெக்ஸ் பொறுமையாக விளக்குகிறார்.

“இரையை மீன் பிடித்தவுடன் தூண்டில் கயிற்றை இழுத்துவிட முடியாது. சிக்கியிருப்பது பெரிய மீன், இந்த தூண்டில்கயிறு பலவீனமானது. அது மட்டுமல்ல, கலவா மீன் இரையை விழுங்கும்வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.”

அலெக்ஸ் குறிப்பிட்டது போலவே, தூண்டிலில் வந்தது பெரிய கலவா மீன். பேராசிரியருக்கு ஆச்சரியம் தாங்காமல் கேட்கிறார்- `உங்கள் விரல் நுனியில் என்ன, கண் இருக்கிறதா!’

சுட்டுவிரல் நுனியில் பிடித்திருக்கும் தூண்டில் கயிற்றின் அதிர்வுகளிருந்து தூண்டிலை அணுகும் மீனின் வகை, எடை மட்டுமல்ல மீனின் வாயில் எப்பகுதியில் தூண்டில் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் கூட மீனவனால் துல்லியமாய்ச் சொல்லிவிட முடியும். வகை வகையான மீன்களின் இரை பிடிக்கும் பண்புகள் மீனவர் மரபறிவின் ஒரு பகுதியாகும்.

இயற்கைக்கு நெருக்கமாக வாழ்வதன் சிறப்பு என்பது,  அதன் ஆற்றலைத்  தனதாக்கிக்கொள்வது. கடலோடிகளின் எளிய மரக்கலமாகிய கட்டுமரத்தை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்க்  குறிப்பிடுகிறார் வேதசகாயகுமார் (வறீதையா கான்ஸ்தந்தின், 2007): "...மனித அறிவில் தோற்றம்கொண்ட மிக எளிமையான தொழிற்கருவி (கட்டுமரம்), காற்றின் சக்தியைத் தனதாக வரிந்துகொள்கிறது."

சங்ககாலத்திலிருந்து இன்று வரை, மீனவர்கள் கடலுயிர்களின் நடைமுறைப் போக்குகளையும் அவற்றின் வருகைக் காலத்தையும் இடங்களையும் குறித்து அறிந்திருந்தனர். தங்கள் பிழைப்புக்காக மீன்பிடித்தலில் ஈடுபட்டுவந்த அவர்கள் கடல் வளம் பேணும் நடைமுறையைக் கைக்கொண்டனர்.  கழிகளிலும் கடலிலும் பகுதிக்கும்  பருவகாலத்துக்கும் ஏற்றவாறு  பல்வகை  வலைகள்,  தூண்டில்,  ஈட்டி, எறிவுளி,  கயிற்றில்  பிணைத்த உளி முதலிய கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். வலைகளில் கண்கள், தூண்டில், உளிகளின் தன்மையை பற்றிச் சங்கப் பாடல்களில் வரும் குறிப்புகள் மீன்களின் பண்புகளை மீனவர்கள் நுட்பமாக அவதானித்திருந்தனர் என்பதற்குச் சான்றாகும். தேர்ந்தெடுத்த மீன்களுக்கான வேட்டம், கிடைக்கும் மீனைக் கைக்கொள்ளும் வேட்டம் இரண்டும் அக்காலத்தில் நிகழ்த்தப்பட்டன (வறீதையா கான்ஸ்தந்தின், 2013).

பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே (குறுந்தொகை 123)
வடிக்கதிர் திரித்த  வல்ஞாண் பெருவலை (நற்றிணை 74:1)
துய்த்தலை இறவொடு தொகைமின் பெறீஇயர்
வரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர் (நற்றிணை 111:2)
கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமில் பரதவர்
வாங்குவிசைத் தூண்டில் ஊங்கு ஊங்கு ஆகி   (நற்றிணை 199)
கொள்வினை புரிந்த கூர்வா  எறியுளி   (குறுந்தொகை 304)
கயிறு கடையாத்த கடுநடை எறிஉளி   (நற்றிணை 388)

விலங்குத் தொன்மங்கள்

கடல்வாழ் உயிரினங்களில் மிகப்பெரிய உயிரினமான திமிங்கிலம், ராட்சத உருவம் கொண்டவை.  அவை சத்தியத்துக்கு கட்டுப்பட்டவை என்று அவர்கள் நம்புகிறார்கள். மீனவர்கள் டால்பின்களையும் திமிங்கிலங்களையும் வேட்டையாடுவதில்ல. கன்னியாகுமரி மீனவர்கள் திமிங்கிலங்களை செல்லப்பிள்ளை என்று அழைக்கிறார்கள். முத்துக்குளித்துறையில்   குருசு நண்டுக்கும் சாவாளை மீனுக்கும் பழங்கதைகள் நிலவுகின்றன. போர்த்துக்கேய மிஷனரி பிரான்சிஸ் சேவியர் கடலில் தவறவிட்ட சிலுவையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த நண்டின் முதுகில் தெரிவது சேவியர் வரைந்த சிலுவைக்குறிதான் என்றோரு தொன்மம். அந்தோனியார் என்னும் புனிதர் கடல் மீன்களுக்குப் பிரசங்கம் நிகழ்த்தியபோது வாளை மீன் ஒழிய சமுத்திரத்தின் எல்லா மீன்களும் வந்திருந்தனவாம். வாளை மீனின் தலைப்பகுதியில் இருக்கும் கல் அந்தோனியார் இட்ட சாபம் என்கிறார்கள் (வறீதையா கான்ஸ்தந்தின், 2018). நீலோடு நீலம் பொருந்திய நீலமக்கரசியாள் கதை, பள்ளத்து அடப்பானார் கதை தென்தமிழகக் கடற்கரைகளிலும் தாடியழகன் கதை, பறக்கோலா கதை வட தமிழகக் கடற்கரைகளிலும் இன்றும் நிலவும் தொன்மங்கள்.

தொன்மங்களின் விநோத உலகத்தில் பசுமை குன்றாமல் நீடிக்கும் ஒரு தொன்மம் வலம்புரிச் சங்கு பற்றியது. வலம்புரிச் சங்கு உங்கள் வாழ்க்கையில் குறைவற்ற வளத்தையும் அளவற்ற இன்பத்தையும் கொடுக்கும் என்கிற நம்பிக்கை இந்தியச் சமூகங்களில் இன்றும் நீடிக்கிறது. வலம்புரிச் சங்கில் விலையுயர்ந்த முத்து விளைகிறது என்கிற நம்பிக்கை சங்க காலத்திலிருந்தே தொடர்கிறது: ‘வலம்புரியீன்ற நலம்புரி முத்தம்’ (சிலப்பதிகாரம்: 27-244), ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே’ (சிலப்பதிகாரம் 2:73), ‘வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்’, ‘வலம்புரியொரு முத்தன்ன’ (பெருந்தொகை 1712:25-27). நளவெண்பா, திணைமாலை நூற்றைம்பது. முத்தொள்ளாயிரம், திருமறைக்காடு, திருவலம்புரம், ஐங்குறுநூறு போன்ற இலக்கியங்களிலும் `வலம்புரி முத்து’ என்னும் கருதுகோள் பதிவாகியுள்ளது.
வலம்புரிச் சங்குகள் கடற்கரைக்கு வந்து முத்துகளைச் சொரிந்து செல்லும் என்றும், வலம்புரிச் சங்கு தானே முழங்கும் என்றும் நம்பிக்கை நிலவிவந்தது (அதியமான், 2005). வலம்புரிச் சங்கினும் உயர்வான சங்கு சலஞ்சலம்; சலஞ்சலத்திலும் உயர்வான சங்கு பாஞ்சசன்யம் என்று மக்கள் கருதினர். ஆயிரம் இடம்புரிச் சங்குக்கு நேரானது ஒரு வலம்புரி; ஆயிரம் வலம்புரிக்கு ஒரு சலஞ்சலம்; ஆயிரம் சலஞ்சலத்துக்கு நேரானது ஒரு பாஞ்சசன்யம்.
சினைச் சுறவின் கோடு

உலக நாடுகளில் சிலவகை மீன்களைக் குலக்குறிகளாகவும் தங்களை பாதுகாக்கும் சக்தியாகவும் கொண்டாடும் வழமை உள்ளது. வியட்நாமியர்கள் திமிங்கிலச் சுறாவை 'மாட்சிமை பொருந்திய மீன்' என்றழைத்து வழிபடுகின்றனர்; விலாங்கு மீன் முண்டா, ஓரான் போன்ற சில பழங்குடிகளின் குலக்குறியாகும் என்பதற்கு க்ரூக்-எந்தோரனின் ஆய்வுகளை (1925) மேற்கோள் காட்டுகிறார் தனஞ்செயன் (2012); தமிழ்நாட்டின்  வடபகுதிக் கடலோர மீனவர்கள் வேடன் (டால்பின்), ஆமை போன்ற உயிரினங்களைக் குலக்குறிகளாய்ப் போற்றுகின்றனர். 2000 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களிடையே நீடிக்கும் சினைச் சுறா முள் வழிபாடு மேக்ரான் (சிந்துவெளி), அந்தமான் கடற்கரைகளில் இன்றும் நிகழ்த்தப்படுவதாக பி.எல்.சாமி (1976) பதிவு செய்துள்ளார்.

‘சினைச் சுறவின் கோடு நட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினால் (பட்டினப்பாலை 86-87).

 'சினை' என்பது 'விருத்தி' / 'செழுமை'யின் அடையாளம். கடலில் மீன்வளம் பெருகவேண்டும் என்பதற்காக சினைச் சுறாவின் முள்ளை நட்டு வழிபட்ட வகையில் அது ‘வளமை வழிபாடாக’ அமைந்தது; கடலில் வாழும் மீன்களுக்கும் மீனவர்களுக்கும் இன்னல் விளைவிக்கும் கொடிய மீனான வாட்சுறாவின் ஆற்றலைத் தமதாக்கிக்கொள்ளும் பொருட்டு சினை மீனைக் கொன்று, அதன் முள்ளைத் துண்டித்துப் பாதுகாத்து வழிபட்டனர். அவ்வகையில் ‘மந்திரம்’ தொடர்பான நம்பிக்கையாகவும் சினைச் சுறவின் முள் அமைந்துள்ளது (தனஞ்செயன், 2012).  

தமிழர்கள் பிற இனங்களைப் போலவே இனம்காண இயலாத புறச்சக்திகளின்பால் நம்பிக்கை கொண்டிருந்தனர்,  இவ்வகைச் சக்திகளை அணங்கு, கடவுள், தெய்வம் என்றழைத்தனர். சுறா முள்  வழிபாட்டின் வழியாக கடலணங்கின் ஆற்றலை சுறாமுள்ளில் ஏற்றுவதாய் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

III

மனிதன் இல்லாமல் உலகம் தோன்றியது; அவன் இல்லாமலே உலகம் தன்னை நிறைவு செய்துகொள்ளும்.
-மானுடவியலாளர் கிளாட் லெவி-ஸ்ட்ராஸ்.

இனவரைவியலை மீளவரைதல்

சைமன் கோல்மன்- பாப் சிம்ப்ஸனின் சொல்லகராதி இனவரைவியலை இவ்வாறு வரையறுக்கிறது: "ஒரு சமூகத்தை, அதன் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளை அதன் உறுப்பினர்களின் பார்வையில் பதிந்து, பகுத்தாய்ந்து, ஆவணப்படுத்துதல்'. 'மனித சமூகங்களை, அவற்றின் பண்பாடுகளை, வளர்ச்சியை அறிவியல்பூர்வமாக ஆராய்தல்' என்பதாக மானுடவியல் வரையறை செய்யப்பட்டுள்ளது.  உயிரியல், சமூக- பண்பாட்டு, மொழிக் கூறுகளில் மனிதன் கடந்து வந்துள்ள பாதையைப் பார்வையிடுவது மானுடவியலின் இலக்காகும். இனவரைவியல், மானுடவியல் என்னும் இவ்விரண்டு ஆய்வுப்புலங்களும் வேறுபடும் புள்ளி- எந்தத் தரப்பினரின் பார்வையில், எவ்வகையான ஆய்வுமுறைமையில் பண்பாட்டு வரலாறு அணுகப்படுகிறது என்பதே.

இயற்கை என்னும் செறிவும் நுட்பமும் மிகுந்த விசாலச் சித்திரத்தை மனிதத் தூரிகை எப்படித் தனித்து வரைந்து தீர்க்க இயலும்? 'சூழலியல் மையப் பார்வை' ' மானுட மையப் பார்வை'க்கு ஆரோக்கியமான மாற்றாக முன்வைக்கப் படுகிறது. இயற்கை வரலாற்றை அதன் அனைத்து உயிர்க்கூறுகளின் பார்வையில் மீள எழுதுவது ‘பல்லுயிரிய இனவரைவியலின்’ இலக்காகும். ‘மானுட மைய இனவரைவிய’லைக் கட்டுடைத்துப் பார்த்தால் மனிதனின் பிழையான அணுகுமுறையை அறிய முடியும். உலகெங்கும் பழங்குடி மனிதர்கள் தாவர, விலங்கினங்களின் பார்வையில் வனத்தை, கடலை அணுகிவருகின்றனர். திணை நிலங்களுக்கிடையில் ஆரோக்கியமான ஊடாட்டங்கள் சாத்தியப்பட்டிருந்தது.

'வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்ப
பாட்டம் பொய்யாது பரதவர் பகர' (நற்றிணை 38/1-2)
என்னும் உலோச்சனாரின் பாடல் மழையை நெய்தல் பழங்குடிகளின் பார்வையை முன்வைக்கிறது. திணை நிலங்களின் பிணைப்பும் நீரியல் சுழற்சிக்கான தேவையும் குறித்த முன்னோர்களின் இப்பார்வையை நாம் இழந்துவிட்டுள்ளோம். நாகரிக மனிதர்கள் இன்று எழுப்பும் 'ஆறுகள் வீணாய்க் கடலில் கலக்கின்றன' என்னும் வெற்றுக் கூச்சல், அவர்கள் இயற்கையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டதன் வெளிப்பாடே.

இனவரைவியல் திணைநில, பல்லுயிரிய, சூழலியல் பார்வையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டியதன் தேவையை இக்கருத்து வெளிச்சத்தில் அணுக வேண்டியுள்ளது. இப்பின்னணியில் 'பல்லுயிரிய இனவரைவியல்' உயராய்வுத் தளங்களில் அணுகப்படுவது காலத்தால் முக்கியத்துவம் பெறுவது.

உலக அளவில் இயற்கை சார்ந்த வாழ்வுக்கு நேர்ந்துவரும் சிதைவுகளை மண்ணின் குடிகளின் பார்வையில் சினுவ ஆச்சிபி, அலெக்ஸ் ஹேலி, சிமமந்தா அடீச்சி, வங்காரி மாத்தாய், தியாங்கோ போன்ற ஏராளம் படைப்பாளிகள் பதிவு செய்துள்ளனர். இப்பெரும் சிக்கலை தமிழ்ச் சூழலில் மணல் கடிகை (கோபாலகிருஷ்ணன்), நெடுங்குருதி (எஸ். ராமகிருஷ்ணன்), காடு (ஜெயமோகன்), ஆழிசூழ் உலகு (ஜோ டி குருஸ்), வந்தாரங்குடி (கண்மணி குணசேகரன்), கற்றாழை (சு.தமிழ்செல்வி), கள்ளி (வாமுகோமு) போன்ற புனைவுகள் பதிவிட்டுள்ளன. இயற்கையை சகவுயிரினங்களின் பார்வையில் மனிதகுலம் அணுகவேண்டியதன் தேவை அண்மைக் காலத்தில் உலக அளவில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. பல்லுயிரிய இனவரைவியல் இதற்கான வாயிலைத் திறந்துவிட்டுள்ளது.

மேற்கோள் நூற்பட்டியல்

அதியமான், ந. 2005. சங்கு. தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
சாமி, பி. எல்., 1976. சங்க நூல்களில் மீன்கள். செந்தமிழ்செல்வி, சென்னை சைவ சித்ததாந்த நூற்பதிப்புக் கழகம்.
தனஞ்செயன், அ,  2012. குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
பனிப்பிள்ளை, இரா. 2016. கடலறிவுகளும் நேரனுபவங்களும். கரண்ட் புக்ஸ்.
மரியஜான் காலிங்கராயன்,1974. செண்பகராமன் பள்ளு. நெய்தல்வெளி)
முத்து. கண்ணப்பன், தி. 1978. சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம். அதிபத்தர் பதிப்பகம்.
வறீதையா கான்ஸ்தந்தின், 2007. அணியம். தமிழினி.
----------------, 2014. பழவேற்காடு முதல் நீரோடி வரை. எதிர் வெளியீடு.
----------------, 2017. மூதாய் மரம். தடாகம்.
----------------, 2018. கடலம்மா பேசுறங் கண்ணு! இந்து தமிழ் திசை.
----------------, 2018அ. 1000 கடல் மைல். தடாகம்- கடல்வெளி.
---------------- (தொ-ஆ), 2013 . எக்கர் (வேதசகாயகுமாரின் உரைகள்). உயிர் எழுத்து- நெய்தல்வெளி.
Brown, Valerie.2012. The Rise of Ecotheology. Retrieved 4 April 2012.
Dobzhansky, Theodosius. 1978. Genetics and the origin of species. Oxford-IBH.
Subramanian, Samanth. 2010. Following fish. Penguin Books.
Turner, J.Scott, 2017. Purpose and desire. Harper One.
==========

பின்னிணைப்பு 1: மீன் பெயரிடுதல்

ஒரு பாரம்பரிய மீனவக் கிராமத்தில் ஓராண்டுகாலம் ஒருவர் தங்கியிருக்க நேர்ந்தால், விதவிதமான மீனினங்களை அவற்றின் தனித்துவமான வாசனைகளோடு காண இயலும். ஒற்றைப் பெயரில் பரிச்சயமான பல மீன்களை மீனவர்கள் ஒரு குடும்பமாய் வகைப்படுத்துவர். சான்றாக, நெத்திலி மீனில் பல இனங்கள் உண்டு: கருநெத்திலி, வெண்ணெத்திலி, நீல நெத்திலி, பொட்டக்கா நெத்திலி, கொநெத்திலி.  சாளையில் நச்சாளை, பேய்ச்சாளை, தெண்டஞ்சாளை, சூடைச்சாளை, மத்திச்சாளை, கீரிமீன் சாளை.என்று பலவகை. வாளையில் சாவாளை, முள்ளுவாளை, பண்டிவாளை, துப்புவாளை…
முட்டி வகையில் பன்னாமுட்டி, கல்லுமுட்டி, காத்தாளை, வரிக்கத்தாளை; குதிப்பு, களிமீன், ஊறும்; கார: குதிப்புக்கார, வரிக்கார, மஞ்சக்கார, காக்கொத்திக்கார, கண்ணாடிக்கார; பார: வேளாப்பார, வரிப்பார, புள்ளிப்பார,; கட்டா, திரியா, வங்கடை, சூரை, நெய்மீன் சூரை, தோட்டா சூரை, கேரை, நெய்மீன் (வஞ்சிரம்), வாவல் (வவ்வால்), வெள்ளை வாவல், கருவாவல், அப்ராஞ்சி, பொன்னார, மோரை, பறவேளா (பறகோலா), பாலாமீன், தேடு, குடுக்கைத்தேடு, இருங்கெழுத்தி, சாளை, முரல், மத்தி, கீரிமீன், அயிலை, குத்த, திரவங்கணை, பூவாலி, நெடுவா, ஊளா, கோழியாமுரல், வாளாமுரல், உளுவை, பூலை, ஊடன், தளை, கடலடித்தரை மட்டத்தில் வாழும் மணங்கு (நிலம்பதுங்கி), வரிமணங்கு, கடிமணங்கு, எருமைநாக்கு, பாறைமடைகளில் வாழும் விளமீன், பேளன், மழுவன், கொரலுகுட்டி, கொடுவா, குறுவலை, கலவா, அடவா, சேமீன், செம்பலி, கிளாத்தி, புள்ளிக் கிளாத்தி, முள்ளுக் கிளாத்தி, காக்காக் கிளாத்தி, ஒற்றைக்கொம்புக் கிளாத்தி...
குருத்தெலும்பு மீன்களான சுறா, திருச்சி, திருக்கை; சுறாக்களில் முள்ளான் சுறா, குரங்கன் சுறா, மீதூர சிறுவகை; கொம்பன் சுறா, புலி சுறா இனங்கள் ஆபத்தானவை. திரச்சியில் ஆனைத்திரச்சி பெரிய வகை.உடல் சுறா போலவும், தலை திரச்சிபோல் தட்டையாகவும் அமைந்த படப்பு (skates) வகையில் வாள் சுறாவும் உட்படும்.

(வறீதையா கான்ஸ்தந்தின், 2018)

 பின்னிணைப்பு 2: மீன் பெயரில் ஆளுமைகள்

கொம்பன் சிறாவு: ஆபத்தானவர்
பெரிய மீனு (திமிங்கிலம்): எல்லோரையும் பயமுறுத்திக் கலைத்துவிடுபவர்
ளாங்கு (விலாங்கு): பிடிகொடாமல் தப்பித்துவிடுபவர்
கொடிச்சாங்கிளாத்தி: ஓய்வு ஒழிவின்றி சலம்பிக்கொண்டிருப்பவர்
புள்ளிமூச்சா: குசும்பு மிகுந்தவர்
கணவா: கணிக்கமுடியாமல் நடந்துகொள்பவர்
வங்கடத்தோல்: சுரணையற்றவர்
கல்லுளுவை : உணர்ச்சியற்றவர்
நாக்கண்டம்: ஒற்றைநாடி உடல்வாகு கொண்டவர்
கோநொத்தொலி: மெலிந்த, வலுவற்றவர்
மீம்புள்ளு:ஏலமிடுகையில் மீனை அள்ளி ஓடும் சிறுவன்.
(வறீதையா கான்ஸ்தந்தின், 2018)

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...